திருமுருகன் காந்தியினை மறுபடியும் அள்ளிகொண்டு சென்றிருக்கின்றார்கள்
திருமுருகன் காந்தியினை மறுபடியும் அள்ளிகொண்டு சென்றிருக்கின்றார்கள்
அதாவது வைகோவிற்கு ஐநா சபையில் சிங்களர் கொடுத்த நெருக்கடி காரணமாக இங்கொரு கும்பல் சென்னை இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டது
இங்கு திருமுருகன் காந்தியும் சென்றிருக்கின்றார், சென்று சத்தம் போட்டுவிட்டு அருகில் டீகடையில் டீ குடித்துகொண்டிருந்தபொழுது போலிஸ் அமுக்கிவிட்டது
அதற்குள் இங்கு டீ குடித்தது குற்றமா? என சில குரல்கள், டீ என்ன அங்கு நின்றுகொண்டு பஞ்சாமிர்தம் உண்டாலும் தூக்கத்தான் செய்வார்கள்.
ஒரு விஷயம் கவனிக்கதக்கது
இந்த திடீர் போராளிகள் எல்லாம் எங்கிருந்து உருவாகின்றார்கள் என்றால் எல்லாமே டெல்டா ஏரியா, அய்யாகண்ணு, இந்த திருமுருகன் இன்னும் பல இம்சைகள் எல்லாம் அப்பக்கமே,
சைமன் மட்டும் சிவ கங்கை
அந்த பக்கம் இருந்து மட்டும் இந்த திடீர் போராளிகளை உருவாக்கும் சக்தி எது?
கோவை, நெல்லை, மதுரை , குமரி, திருச்சி பக்கம் எல்லாம் விட்டுவிட்டு இங்கிருந்து மட்டும் எப்படி உருவாகின்றார்கள்.
ஆக அந்த பகுதியில் ஏதோ ஒரு குழப்ப சக்தி பலரை போராட சொல்லி தூண்டிவிட்டுகொண்டே இருக்கின்றது, அது எது? எதற்காக? என்பது ஒருநாள் தெரியாமல் போகாது.
எனினும் தீவிரமாக கவனிக்க வேண்டிய விஷயம் இது.