ஜெயா மரணத்தில் சசிகலா சர்ச்சையானவர் …..

ஜெயா மரணத்தில் சசிகலா சர்ச்சையானவர் என்றொரு கோஷ்டியும், இல்லை இல்லை டெல்லியின் நடவடிக்கைகளும் மர்மமானவை என இன்னொரு கோஷ்டியும் சொல்லிகொண்டிருக்கின்றது

சசிகலாவின் பலம் ஜெயலலிதா, ஜெயலலிதா இல்லாவிட்டால் சசிகலா வெறும் மண்பொம்மை என்பது சசிகலாவிற்கு தெரியாததல்ல, ஜெயாவின் மரணத்தை சசிகலா நிச்சயம் விரும்பமாட்டார்.

டெல்லிக்கும் அதிமுகவிற்கும் உள்ள ரகசிய இழைகள் புரிந்துகொள்ளமுடியாதவை. ராஜிவ்காந்திதான் ஜெயா தமிழக அரசியல் சக்தியாக மாற முழு உதவி செய்தவர். பாஜகவிற்கும் ஜெயாவிற்கும் இடையில் நிறைய புரிந்துணர்வு உண்டு

ஆக விசாரணையின் முடிவிலே உண்மை தெரியலாம், அல்லது தெரியாமலே போகலாம்.

ஜெயா மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பொன்னார் தமிழகத்தில் பெரும் மாற்றம் நடக்குமென்றார், அவருக்கு எப்படி தெரிந்தது என பலர் பாயிண்ட் பிடிக்கின்றார்களாம்

பொன்னார் தமிழிசை எல்லாம் ஆயிரம் சொல்வார்கள், அதெல்லாம் கணக்கில் வராது

ஆனால் கணக்கில் வரவேண்டிய ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள்.

அது மா.நடராஜன் முன்பொரு காலத்தில் சொன்னது

1990களில் நிழல் முதல்வர் நான் என நடராஜன் சுற்றிகொண்டிருந்த பொழுது ஜெயா அவர் மீது பலத்த கண்டனமும் சில நடவடிக்கைகளும் எடுத்தார், அவர் போயஸ் கார்டன் நுழையவும் தடை விதிக்கபட்டது

அப்பொழுது நடராஜன் சொன்னது இதுதான்

“என் மனைவி சசிகலா தமிழக முதல்வராகும் நாளில்தான் இனி போயஸ்கார்டனில் கால் வைப்பேன்”

ஜெயா இறந்தபின் சசிகலா ஜெயா கொண்டையோடு அரியாசனம் ஏற கிளம்பியதும், நடராஜன் “நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம்” என அசால்ட்டாக பேட்டி கொடுத்ததும் சமீபத்திய நிகழ்வுகள்.

விசாரணை கமிஷன் தொடங்கபட்டதும், அதனை தொடர்ந்து நடராஜன் மருத்துவமனையில் மல்லாக்க கிடப்பதும் இப்போதைய செய்திகள்.

ஜெயா இருக்கும் பொழுதே, என் மனைவியினை ஒரு நாளில் முதல்வராக்குவேன் என்ற நடராஜனின் வரி மகா முக்கியமானது, ஆனால் யாராவது இதுபற்றி பேசுவார்களா என்றால் இல்லை.

மாறாக விட்டில் பூச்சியான பொன்னார், வெங்கையா நாயுடு பற்றி எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்கள்.