குஷ்பூ தமிழக காங்கிரசின் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை

எவனோ தலை குழம்பிய கிறுக்கன், சாலையோரத்தில் வேலையற்று இருப்பவன், குதர்க்க சிந்தனையில் சீழ்பிடித்த சிறுபுத்திக்காரன் கிளப்பிவிட்டிருக்கின்றான் ஒரு வதந்தியினை

அதாவது தலைவி குஷ்பூ காங்கிரசில் இருந்து விலகி விட்டதாக பெரும் பரபரப்பினை கிளப்பிவிட்டிருக்கின்றான்

தலைவி தமிழக காங்கிரசின் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை. அவர் இல்லாத காங்கிரஸ் கவுன்சிலர் பதவிக்கு கூட வராது என்பது உலகறிந்த உண்மை.

இது காங்கிரசுக்கும் நன்றாக தெரியும்.

ஆளைவிட்டால் போதும் என தலையினை பிய்த்து கொண்டிருக்கும் மோடியே, அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கும் நிலையில் இருக்கின்றது நாடு.

அப்படி இன்னும் இருவருடத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, மத்திய அமைச்சராகும் வாய்ப்பில் இருக்கின்றார் குஷ்பூ

இது பொறுக்கமுடியாத எவனோ புலம்பியிருக்கின்றான், அது பரவிவிட்டது, தலைவி தான் அப்படி நினைக்க கூட இல்லை என சொல்லியிருக்கின்றார்.

காங்கிரஸ் கட்சி உரிய மரியாதை கொடுத்தால் தலைவி காங்கிரசில் நீடிப்பார், இல்லாவிட்டால் இன்னொரு தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் காலத்தில் வலுவாக உருவானது போல இன்னொரு பிரிவினை தடுக்க முடியாது.

கோடான கோடி ரசிகர்களை கொண்ட அந்த குஷ்பூ சங்கம், அவரை பெரும் பதவியில் அமர்த்தியே தீரும்.

ஆக காங்கிரசார் பலமுறை யோசிப்பது நல்லது. ஆர்.எம் வீரப்பனை அழித்து விட்டு, பின் பாஜகவினை கொஞ்ச நாள் மூழ்கடித்துவிட்டு இப்பொழுது காங்கிரசை அழிக்க வந்திருக்கும் திருநாவுக்கரசு பேச்சை கேட்காமல் இருப்பது காங்கிரசுக்கு நல்லது

இல்லையேல் மாலுமி இல்லா கப்பலாக அது மூழ்கபோவதை தடுப்பது யாராலும் முடியாது.