நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, sitting and indoorஸ்டாலின் கடல் அலை போல தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றார்.

ஜெயலலிதா மர்மம் தொடர்பான விஷயத்தை அவர் இனி விடுவதில்லை என்றே தெரிகின்றது. அட்டகாசமான பார்மிற்கு வந்துவிட்டார்.

சீனிவாசன் முதல் ஆளுநர் வரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை

உண்மையில் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழும் கேள்விகள் அவை.

மருத்துவமனையில் இருந்தது ஒரு முதல்வர், அவரை சந்திக்க சென்றது ஆளுநர். அந்த ஆளுநர் தான் ஜெயாவினை பார்த்ததாக சொல்லியிருந்தார்.

இப்பொழுது அமைச்சரும் தினகரனும் ஜெயாவினை யாரும் பார்க்கவேயில்லை என சத்தியம் செய்கின்றார்கள்

ஸ்டாலின் மிக உரக்க இதற்கு ஆளுநர் மாளிகை பதில் என்ன என கேட்கும் கேள்விக்கு கைதட்டித்தான் தீரவேண்டும்

எதற்குடுத்தாலும், கேள்வியே இல்லை என்றாலும் தானாக பதில் சொல்லிகொண்டிருந்த தமிழிசை, பொன்னார், இன்னும் பலர் சத்தமேயில்லை

அதிமுக தரப்பும் அமைதி, இனி உலுக்கி கேட்டால் அழுதுவிடுவார்கள்.

ஜெயாமீது பெரும் அபிமானம் யாருக்கும் இல்லை. தன் கழுத்தில் தூக்கு கயிறினை மாட்டி பிடியினை அவர் சசிகலாவிடம் கொடுத்து கிட்டதட்ட 30 வருடங்கள் ஆகின்றது என்பது ரகசியமல்ல‌

ஆனால் ஒரு முதல்வரின் உடல் நிலையில் ஆளுநர் உட்பட எல்லோரும் பொய்சொன்னார்களா? எனும் கேள்வி எழும்பொழுது அது மிக மிக அபாயமானது, ஆபத்தனது, முடிவு தெரிந்தே ஆகவேண்டிய விஷயம்

அப்படி நியாத்தை கேட்டு, அரசை உலுக்கும் கேள்விகளை கேட்க தொடங்கும் மு.க ஸ்டாலினை வாழ்த்தததான் வேண்டும்

அன்றொருநாள் திமுக ஆட்சியில் ஜெயா சொன்னார்

“என்னை கொல்ல திமுக சதி செய்கின்றது, நான் இருக்கும் வரை தன் கனவு நிறைவேறாது என நினைக்கும் திமுக தரப்பு என்னை கொல்லபார்க்கின்றது எனக்கு உளவு தகவல் கிடைத்திருக்கின்றது” என்றேல்லாம் பேசினார்

ஜெயாவிற்கு இது புதிதல்ல, 1986 முதல் இதே அழுகைதான். ஒருமுறை ஒரு விபத்தில் சிக்கி கூட இப்படித்தான் புலம்பிகொண்டிருந்தார்

கலைஞரும் பல விபத்துக்களில் சிக்கியவர்தான், ஒரு கண்ணே பாதிக்கபட்டவர்தான், அதுபோக அவரை அடித்து சாக்கடையில் வீசிய சம்பவங்களும் உண்டு

ஆனால் யாரையும் குற்றம் சாட்டியவரல்ல அவர், அவர் தன்மை அப்படி

ஜெயா எப்படியென்பது சென்னரெட்டி விஷயத்திலே தெரிந்தது

ஒரு காலத்தில் தன் அருகிருபவர்களே அவர் கழுத்தில் கத்தி வைத்த நிலையில், திமுக மீது கொலை சதி என புலம்பிகொண்டிருந்த ஜெய்லலிதாவிற்கு இன்று திமுகவில் இருந்துதான் நியாய‌ குரல் வருகின்றது.

நாம் திமுக காரர் அல்ல. ஸ்டாலின் அனுதாபியும் அல்ல. ஆனால் ஸ்டாலினின் கேள்விகள் நியாயமானது. மொத்த மக்களின் கேள்விகள் அது

அதற்கு வலுசேர்ப்பது தமிழரின் கடமைதான், சந்தேகமேயில்லை.

நீ தமிழனாய் இருந்தால் அதனை செய் இதனை செய் என சில கும்பல்கள் சொல்லிகொண்டே இருக்கும். இப்பொழுது அவை ஒன்றுமே சொல்லாது

அதுவும் இலங்கைக்கு விசாரணை வேண்டும் என கேட்கும் சீமான் கோஷ்டிகள் ஜெயலலிதாவிற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கவே கேட்காது.

ஏன் என்றால் அவர்களுக்கு படியளக்கும் நடராஜ சுவாமிகள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார்

என்ன சிகிச்சை ?சிறுநீரகத்திற்கு காத்திருக்கின்றாராம்

நொடியில் லண்டன் டாக்டரை வரவழைக்க முடியும், நொடியில் 100 எம்.எல்.ஏக்களுக்கு கோடி கணக்கில் கொட்டி கொடுக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் குடும்பம், ஒரு சிறுநீரகத்திற்கு காத்திருக்கின்றதாம்

நம்ப முடிகின்றதா?

நம்பித்தான் ஆகவேண்டும், விசாரணை முடியும்வரை அவர் சிறுநீரகம் கல்லீரல் குடல் (இதயம் எப்பொழுதுமே இல்லை) என எதுவுமே இல்லாமல் வாழ்வார்.

ஆறுமுகசாமி விசாரணை முடிந்த மறுநிமிடம் நடராஜனுக்கு கிட்னி கிடைக்கும், அதுவரை எந்த உறுப்புமே இல்லாமல் அவரால் வாழ முடியும்.

அவர் வாழட்டும்.

நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்.