ஜெயாவினை பற்றி மகளிர் பேசினால் அதன் சக்தியே தனி
அப்பொழுது திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்தது. தொகுதிதான் திருச்செந்தூர், நெல்லை,கன்னியாகுமரி என பிரிந்திருக்குமே தவிர மக்களின் இயல்பு ஒன்றுதான்
வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் நடந்தது, ஜெயா அரசால் செய்யபட்ட படுகொலை என்றே செய்திகள் சொன்னது. சாத்தான்குளம் இடைதேர்தலில் ஜெயாவின் வலதுகரமாக சுழன்ற வெங்கடேச பண்ணணையார்தான், பின்பு கொல்லபட வேண்டிய ஆபத்தானவன் என அதே ஜெயா ஆட்சியில்
சுட்டும் கொல்லபட்டார்.
தென் மாவட்டங்கள் கொந்தளித்தபொழுது கலைஞரின் கணக்கு மிக கச்சிதமாய் இருந்தது. மனிதாபிமானம், இரக்கம், அரசியல் என எல்லாம் கலந்த கணக்கு அது. திமுக சார்பில் பண்ணையாரின் மனைவிக்கு சீட் கிடைத்தது.
கையில் குழந்தையோடு அவர் வீதிக்கு வந்த காட்சியில் தாய்குலமே கதறியது, அழுதது. தன் வீட்டு பெண்ணாகவே அவரை கட்டி அழுதனர். திருச்செந்தூரை தாண்டி பல தொகுதிகளில் அதன் தாக்கம் இருந்தது.
விளைவு தென்னகததில் அந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி கிட்டிற்று
39 தொகுதிகளையும் திமுக அப்படி கைபற்ற, கலைஞரின் அந்த திட்டம் கைகொடுத்தது. அதுவரை கண்ணாமூச்சி காட்டிய தென்மாவட்டங்களில் திமுக அபாரவெற்றி பெற்றதற்கு பெரும் காரணம் ராதிகா செல்விக்கு பெருகியிருந்த அனுதாபம்
பெண்ணை கண்டவுடன் பெண்கள் மனதில் தானாக உருவான அனுதாபமும், உணர்ச்சியும் அப்படி திமுகவிற்கு ஆதரவாய் மாறின.
தாய்குலங்களின் வோட்டு திமுகவிற்கு விழுந்தால் அது எப்படி அசுரபலம் பெறும் என வரலாற்றில் காட்டிய தேர்தல் அது. சந்தேகமே இல்லை, அதுவரை அப்படி ஒரு வெற்றியினை திமுக பெற்றதில்லை.
இதனை கணித்த கலைஞர் அந்த ராதிகா செல்வியினை மத்திய அமைச்சராக்கி நன்றிகடனை செவ்வனே செய்தார், அது மிக குறிப்பிடவேண்டிய விஷயம்.
இந்த வரலாறு இப்பொழுது எதற்கு என்றால் விஷயமிருக்கின்றது
திமுக ஜெயா மர்மத்திற்காக கச்சை கட்ட தொடங்கியாயிற்று, முகஸ்டாலின் ஆ.ராசா என தொடங்கிவிட்டார்கள், நிச்சயம் இனி எல்லோரும் பேசுவார்கள்
திமுக கொஞ்சம் நுணுக்கமாக திட்டமிடலாம்
இறந்தது இரும்பு பெண் ஜெயலலிதா, அவர் மேல் தமிழக பெண்களுக்கு என்றுமே பாசமும் பிரமிப்பும் உண்டு. ஜெயா அரசியல் வெற்றிகளுக்கு அதுதான் அஸ்திவாரம்
அந்த பெண்ணுக்கான நீதி போராட்டத்தில் திமுக சார்பில் பெண்களை பேசவைக்கலாம், இன்னும் வலு கூடும்
அதிமுக போல சரஸ்வதியும், வளர்மதியும் கொண்ட கட்சி அல்ல திமுக. பெரும் அறிவார்ந்த பெண்மணிகள், சிந்தனையாளர்கள், தனி அடையாளம் பெற்றவர்கள் உண்டு.
தமிழச்சி தங்கபாண்டியன், Rajathi Salma போன்ற பெரும் பிம்பங்கள் உண்டு. அவர்கள் கலைஞரால் அடையாளம் காணபட்டவர்கள். திறமைக்கு குறைவிலாதவர்கள், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்
இவர்களுக்காக பெரும் பெண்கள் வட்டம் வாசகர்கள், ரசிகர்கள், திமுகவினர் என்ற பட்டாளம் உண்டு.
அந்த பெண்மணிகள் மூலமாக ஜெயா மர்மத்தை திமுக முன்னெடுத்து சென்றால், அவர்கள் எல்லாம் தீவிரமாக பேசினால் எழுதினால் , அது தமிழக தாய்குலங்களிடம் எளிதில் சென்றடையும், மக்களுக்கு உண்மை நிலை தெரியவரும்.
திமுக தன் மகளிர் அணியினை வலுபடுத்தி களமிறக்கினால், பெரும் மாற்றம் நடக்கும். ஜெயா என்ற மகளிரின் தனி ஒரு அபிமானம் பெற்ற தலைவர் இல்லா நிலையில் திமுக அவர்களிடம் அபிமானம் பெற்றுகொள்வது சால சிறந்தது.
அது மகளிர் அணியினை முன்னிறுத்தாமல் முடியாது.
திமுக இதனை செய்தால் அது அடையபோகும் நலன்கள் பெரிது, கட்சிக்கு பெரும் அடையாளமும், தாய்குலங்கள் மத்தியில் பெரும் அபிமானத்தையும் பெற்று தரும்.
கலைஞர் தீவிர அரசியலில் இருந்தால் இதனைத்தான் செய்திருப்பார். இப்பொழுது கவனியுங்கள் ஸ்டாலின் குரல் வருகிறதேயன்றி, திமுக சார்பில் மகளிர் குரல்கள் இன்னும் வரவில்லை. கலைஞர் இருந்திருந்தால் பேசவேண்டியவர்களை பேச வைத்திருப்ப்பார்.
ஜெயாவினை பற்றி மகளிர் பேசினால் அதன் சக்தியே தனி.
இதெல்லாம் அவர்கள் கட்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம், ஆனால் செய்தால் தமிழகத்திற்கு மிக நல்லது நல்லது