காசி முதல் சுற்றுலா இடமாம், மதுரா இரண்டாவதாம் !!
அந்த மாநிலம் பின் தங்கி இருக்கின்றது, குழந்தைகள் சிகிச்சையின்றி சாகின்றன, பெரும் மக்கள் தொகை பெருக்கமும் , அடிப்படை வசதிகளே இல்லா நிலையிலும் தத்தளிக்கின்றது.
தாஜ்மஹால் அந்த மாநிலத்தில்தான் இருக்கின்றது, ஆண்டுக்கு 40 லட்சம் மக்கள் அதனை காண வருகின்றார்கள் என்கின்றது கணக்கு
அதனை நல்லபடியாக பயன்படுத்தினாலே உபியின் ஒரு பகுதி சுற்றுலா தொழிலால் ஜொலிக்கும்.
நல்ல அரசு என்றால் அதனைத்தான் செய்யும்
காசி முதல் சுற்றுலா இடமாம், மதுரா இரண்டாவதாம்
காசி, மதுரா எல்லாம் புண்ணிய தலமா? சுற்றுலா தலமா?
காசியும் மதுராவும் பகவான்கள் அவதரித்த புண்ணிய பூமிகள், அங்கு பக்தர்களாக வருபவர்கள்தான் அதிகம், அதனை ஏன் சுற்றுலா என ஆக்க வேண்டும்?
எல்லா மக்களும் வந்து கங்ஙாஸ்நானம் செய்யவா?
தாஜ்மகால் சுற்றுலா பட்டியலில் இருந்து எடுக்கபட்டுவிட்டால் அங்கு மிஸ்டர் யோகியினை பார்க்கவா செல்வார்கள்?
நல்ல வேளையாக அது உலக அதிசயமாக யுனெஸ்கோ போன்ற அமைப்புகளின் கையில் இருக்கின்றது
உபி கையில் இருந்தால் இந்நேரம் கடப்பாரை எடுத்து கரசேவை செய்ய கிளம்பியிருப்பார்கள்.