ஏன் இந்த இரட்டை வேடம்?
“கருத்துகளைச் சொல்லக்கூடச் சுதந்திரம் இல்லையென்கிற போது, எனக்குத் தோன்றுகிறது – நாம் ஒரு ஜனநாயகத்தில்தான் இருக்கிறோமா?” : கொளரி லங்கேஷ் அஞ்சலி நிகழ்ச்சியில் திருமாவளவன் உருக்கம்
மிஸ்டர் திருமா, கொஞ்சம் காலத்தை பின்னோக்கி பாருங்கள்
முன்பு குஷ்பூ ஏதோ விஷயத்திற்கு தன் கருத்தை சொல்லிவிட்டார் என்பதர்காக எப்படி எல்லாம் குதித்தீர்கள்?, அம்பேத்கர் கல்லறைக்கும் பெரியாரின் புத்தக அறைக்கும் எப்படி எல்லாம் உருண்டீர்கள் நினைவிருக்கின்றதா?
குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் முழங்காலில் நிற்க வேண்டும் என்றேல்லாம் குதித்து பொங்கியது உங்களுக்கு மறக்கலாம் எங்களுக்கு மறக்குமா?
எத்தனை வழக்குகள் அவர் மீது பாய நீங்களும் உங்கள் அடிபொடிகளு காரணமாயிருந்தீர்கள்
அப்படிபட்ட நீர்தான் இன்று கவுரிக்காக, ஒரு கருத்து சொல்வது குற்றமா என உருகி நிற்கின்றீர்கள்
கவுரி கருத்து சொன்னால் அது உரிமை என்றால், குஷ்பூ சொன்னால் அதற்கு பொங்கி தீர்க்க உங்களுக்கு என்ன உரிமை
குஷ்பூவினை பாடாய் படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அல்லவா நீங்கள் கவுரி உரிமை பற்றி பேசியிருக்க வேண்டும்
ஏன் இந்த இரட்டை வேடம்?
கலாச்சாரத்தை காக்கின்றேன் என எங்கள் தலைவியினை பாடாய் படுத்திய உங்களுக்கும், கௌரி கொலை செய்த அந்த கலாச்சார கும்பலுக்கும் என்ன வித்தியாசம்???
# மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம், அடங்க மறுக்கவும் திருப்பி அடிக்கவும் எங்களுக்கும் தெரியும்