சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் உண்மை சிக்கல் !

சசிகலாவிற்கு பரோல் கிடைப்பதில் உண்மை சிக்கல் என்னவென்று தகவல்கள் கசிகின்றது, அத்தகவல் வித்தியாசனாமனது

அதாகபட்டது சிறையில் இருக்கும் சசிகலா தன் கணவரை காண செல்வதாக குறிப்பிடவில்லை, ஏன் குறிப்பிடவில்லை என்பதில்தான் சிக்கல் இருக்கின்றதாம்

சசிகலா நடராஜனின் மனைவி, சந்தேகமில்லை. கலைஞர் நடத்தி வைத்த திருமணம் அது

ஆனால் திருமணம் பதிவு செய்யபட்டதா? அதற்கான சான்றிதழ் உண்டா என்பது மர்மம்,

காரணம் ஜெயா போலவே சசிகலா வாழ்விலும் சில மர்மங்கள் உண்டு

இப்பொழுது சசிகலா கோர்ட்டில் பெயில் வாங்க சட்டபூர்வமான ஆதாரம் தேவை.

கவனியுங்கள், சசிகலா மீது ஆயிரம் வழக்குகள் குவிந்தாலும் அவரின் உறவினர்கள் சிக்கினாலும், நடராஜன் மீது அந்த வழக்குகளின் நிழல் கூட வராது

அவ்வளவு சமத்தாக விளையாடிகொண்டிருப்பவர் நடராஜன், சசிகலாவிற்கும் தனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது போன்றது அது. அதனால்தான் சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிக்கவில்லை

அந்த தந்திரம் தான் இப்பொழுது சசிகலா பரோலுக்கு பெரும் தடை. தன் கணவர்தான் நடராஜன் என சட்டபூர்வமாக சான்றிதழ் கொடுக்க சசிகலா தயங்குவதாக சில செய்திகள் சொல்கின்றன‌

இந்த பலவீனம் அரசு தரப்புக்கு தெரியாதா? அவர்களும் துணிந்து விளையாடுகின்றார்கள்.

ஆனாலும் சசிகலா தரப்பு விடாது, ஒரு எல்லை வரைதான் பொறுப்பார்கள் அதன் பின் அதிரடி காட்டுவார்கள்

“ஆமாம், சான்றிதழ் இல்லை இனிதான் திருமண பதிவு செய்யவேண்டும், அதுவும் அவர் உடல்நிலை சரியில்லாதபொழுது உடனே செய்யவேண்டும், அதற்கு பரோல் அனுமதி கொடுங்கள்” என கேட்டால் கோர்ட் அரண்டுவிடுமா இல்லையா?