கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஐ.நா அழைப்பு

கொலைகார சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கும் அவரது வாரிசு ஹனிபிரீத் சிங்கிற்கும் ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது

இருவருமே கொலை குற்றசாட்டில் சிறையில் அடைக்கபட்டிருக்கின்றார்கள், இது தெரியாமல் ஐ.நாவில் உரையாற்ற அழைப்பு வந்திருப்பது பெரும் விஷயமாகிவிட்டது, சந்தி சிரிக்கின்றது

கழிப்பறை வசதி தொடர்பாக இவர்கள் உரையாற்ற வேண்டும் என கேட்டுகொள்ளபட்டிருக்கும் பொழுது “அவர்களே கழிவறைதான் சிறையில் கழுவிகொண்டிருக்கின்றார்கள், இன்னும் பல வருடம் கழுவுவார்கள்” என வந்த பதிலை கேட்டு ஆடி போயிருக்கின்றது ஐ.ந சபை.

அதாவது அன்னார் என்றோ நானும் என் வாரிசும் பெரிய தொண்டு செய்கின்றோம், கழிப்பறை எல்லாம் கட்டி கொடுக்கின்றோம் என்னை பேச அனுமதியுங்கள் என கடிதம் எழுதியிருக்கின்றார், ஐநா பரிசீலித்து கடிதம் எழுதியிருக்கின்றது, அதற்குள் அவர் சிறைக்கு போய்விட்டார் அது ஐநா சபைக்கு தெரியாது என்பதுதான் விஷயம்

இது இன்னொரு நோக்கிலும் சொல்லபடுகின்றது

இந்த ஐ.நா சபையின் மனித உரிமை பிரிவுக்கு என்னமோ ஆயிற்று குழப்பவாதிகளும், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுமான‌ திருமுருகன், வைகோ, கவுதமனை எல்லாம் பேச அழைக்கின்றது, அப்படியே இந்த சாமியார் குடும்பத்தையும் அழைக்கின்றது

ஆக இந்த கொலைகார சாமியாருக்கு அழைப்பு விடுத்த அவையில்தான் கவுதமனும், வைகோவும் முழங்கி விட்டு வந்திருக்கின்றார்கள், என்ன ஒரு 
அவமானம்.

மிஸ்டர் வைகோ , இதில் நீர் கம்பு வேறு சுற்றினீரா???