சாமியார்களை உருவாக்க இயக்கம் எதற்கு?

உபி முதல்வர் யோகி, அங்கே ஆயிரம் சிக்கல்,, செய்ய வேண்டிய காரியம் ஏகபட்டது உண்டு

கோரக்பூரில் மருத்துவ வசதியின்றி இறந்த குழந்தைகள் கொஞ்சமல்ல‌

இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பகுதி அங்கு எவ்வளவோ உண்டு

ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு கேரள ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் ஆளுக்கு முன்பு வந்து நிற்கின்றார்

பொதுவாக ஒரு அமைப்பு ஊர்வலம் நடத்துகின்றது என்றால் தங்களின் அதி உச்ச சாதனையாளரை அழைத்து வந்து மக்களை கவரபார்ப்பார்கள்

இவர்கள் அழைத்து வந்திருப்பது அந்த யோகியினை எனும்பொழுது “ஏம்பா அப்படியானால் ஆர்,எஸ்.எஸ் இத்தனை வருடமாக உருப்படியாக யாரையும் உருவாக்கவில்லையா? இவர்தான் இருப்பதிலே உருப்படியா? விளங்குமா? என மக்கள் சொல்லமாட்டார்களா?

உபியினை விட மிக வளர்ந்த கேரளாவிற்கு , மிக பின் தங்கிய மாநிலமான உபியினை இன்னும் பின்னோக்கி இழுத்து செல்லும் சாமியாரை இழுத்து வந்து ” பாருங்கள் எங்கள் தலைவனை” என்றால் மலையாளிகள் சிரிக்கமாட்டார்களா?

உபி போல கேரளாவினை ஆக்கபோகின்றீர்களா என மலையாளிகள் நக்கலாக கேட்டால் எப்படி இருக்கும்?

ஆக ஆர்.எஸ்.எஸ் இயக்க சாதனை என்னவென்றால் பாபர் மசூதியினை இடித்தது, யோகி போன்ற சாமியாரை உருவாக்கியது.

சாமியார்களை உருவாக்க இயக்கம் எதற்கு? கோவில் வாசல்கள் அதனை தானாக செய்யும்

ஆளே இல்லாமல் யோகியினை அழைத்து வந்து கேரளாவில் காமெடி செய்கின்றது ஆர்.எஸ்.எஸ்.

கேரளாவில் இந்த காமெடி என்றாலும், தமிழக பக்கம் வர ஆயிரம் முறை யோசிப்பார்கள்

காரணம் தமிழ்நாடு காட்டிகொண்டிருக்கும் பயம் அப்படி

இப்போதைக்கு அவர்களின் ஒரே ஆறுதல் பழனிச்சாமியும் பன்னீருமே. அவர்களும் இல்லையென்றால் வாய்விட்டு அழுதிருப்பார்கள்