சொன்னார்கள் : கமல், ராகுல், சீமான்

Image may contain: one or more people and people sittingசித்தராமையா மீதான ஊழல்களை விரைவில் வெளியிடுவேன்: பி.எஸ்.எடியூரப்பா

(ஊழல் தடுப்பு அமைச்சர், ஆணைய தலைவர், மற்றும் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்திய காட்சி)


50 வருடம் கண்ணை மூடிகொண்டு இருந்துவிட்டோம் : கமலஹாசன்

அதெல்லாம் இல்ல பாஸ், 6 வயதில் மெய்யப்ப செட்டியாரிடம் கார் வாங்கியதில் இருந்து சோனி கம்பெனியிடம் மருதநாயகத்திற்கு அட்வான்ஸ் வாங்கியது வரை எவ்வளவு சம்பாதித்தாயிற்று.

இதுகாலம் வரை அரசியல் பேசாமல் எவ்வளவு விருதுகள் பெற்றாயிற்று.

கண்ணை மூடிகொண்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா?


 

2018 செப்டம்பர் மாததிற்குள்ளாக ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் தயார்

அதாவது தமிழக பழனிச்சாமி அரசுக்கு மங்களம் பாடிவிட்டு பார்லிமெண்ட் தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தலும் நடக்க வாய்பிருக்கின்றது.


காங்கிரஸின் திட்டங்களையே மீண்டும் தொடங்கி வைக்கிறது பாஜக: ராகுல் காந்தி

அய்யய்யோ இவரை யாராவது சும்மா இருக்க சொல்லுங்கள்

ஜிஎஸ்டி, கருப்பு பண ஒழிப்பு, மானிங்கள் வெட்டு, மாட்டுகறி என எல்லா சிக்கலையும் ஒரே நேரத்தில் பாஜக சந்தித்துகொண்டு பெரும் கலக்கத்தில் இருக்கின்றது.

குவியும் கண்டனங்கள் கொஞ்சமல்ல..

இந்த நேரத்தில் இவர் வந்து இதெல்லாம் எங்கள் திட்டம் என்றால் பாஜகவிற்கு கொண்டாட்டம் ஆகிவிடாதா?


தாஜ்மஹாலுக்கு மத அடையாளம் பூசுவது அறிவற்ற செயல் : சீமான்

மதுரை திருமலைநாயக்கர் மஹாலுக்கு சாதிச்சாயம், இனச்சாயம் பூசியது மிக அறிவார்ந்த செயலா மிஸ்டர் சைமன்??

கலையழமும், பிரமாண்டமும் மிக்க நாயக்கர் மகால் அடிமை சின்னம் என சொல்லியது யார்?

வந்தேறி கட்டிய மாளிகை தமிழ் மண்ணில் எதற்கு என சொன்னது நீரேதான்.

மதவாதம் ஆபத்து என்றால் நீர் கத்தும் இனவாதம் என்ன வகை?

இஷ்டத்துக்கு பேசுவதை நீர் மறக்கலாம், தமிழகம் மறக்காது மிஸ்டர் சைமன்