மழை பெய்த பகுதிகளின் டெங்கு வேகமாக பரவுகின்றது

மழை பெய்த பகுதிகளின் டெங்கு வேகமாக பரவுகின்றது, இன்னொரு பக்கம் பன்றிகாய்ச்சலும் பரவுகின்றதாம்

தமிழகம் மருத்துவ ரீதியாக பெரும் சவாலை சந்திக்கின்றது, திரும்பும் பக்கமெல்லாம் டெங்கு சாவுகள் தெரிகின்றன‌

இதில் இன்னும் புயல் சின்னம் இன்னபிற மழை அறிகுறிகள் தெரிகின்றன, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகின்றது.

அரசு நடவடிக்கை எடுக்கின்றதா இல்லையா என்பது மற்றொரு புறம். அரசியல் குரலெழுப்ப இது நேரமுமல்ல. ஊர்வலம் போராட்டம் புரட்சி எல்லாம் செய்ய டெங்கு அவகாசம் கொடுக்காது

ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் விழிப்புணர்வும் வேண்டும். நோய் பரவும் ஒவ்வொரு வழியினையும் அடைக்க வேண்டும்.

முடிந்தமட்டும் மிக பொறுப்பாக ,கவனமாக‌ இந்த சவால்களை கடந்து செல்வது மக்களின் கையில் இருக்கின்றது.

ஊர் கூடினால் தேரை இழுக்கலாம் என்பதல்ல நோயினையும் விரட்டலாம்