சிங்கள நாச்சியம்மன் கோவில்
நாம் தமிழருக்கும், சீமானுக்கும் நெஞ்சு மற்றும் இன்னபிற பாகங்கள் எல்லாம் வெடிக்கும் செய்தி ஒன்று வருகின்றது
கேட்டால் செத்துவிடுவார்கள், ஆம் சிங்கள பெண் ஒருத்திக்கு தஞ்சை பக்கம் கோவில் இருக்கின்றதாம், எப்படி வந்தது?
சோழ நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு மிக பழமையானது, அந்த தொடர்பு தஞ்சையினை மராட்டியர் ஆளும்பொழுதும் இருந்திருக்கின்றது
அப்பொழுது ஏதோ பணிக்காக இலங்கையில் இருந்து சிங்கள தம்பதி தஞ்சைக்கு வந்திருக்கின்றது
ஏதோ பிரச்சினையில் அவர் கொல்லபட, கண்ணகி போல சாபமிட்ட அப்பெண்ணும் நெருப்பில் வீழ்ந்து இறந்துள்ளார்
பின்னாளில் அவர் சாமியாக்கபட்டிருக்கின்றார், அவருக்கு சிங்கள நாச்சியம்மன் என பெயரிடபட்டிருக்கின்றது
பின்னாளில் அது செங்கலமாரியம்மன் என ஆகிவிட்டதாம். வரலாறுகளை புரட்டினால் அது 200 ஆண்டுகால கோவில் என்றும் , சிங்கள நாச்சியம்மன் என வழிபட்டதும் தெரிகின்றது.
ஆக வீரதமிழன் அருண்மொழிதேவன் ஆண்ட மண்ணில் தமிழின விரோதி சிங்களத்திக்கு கோவிலே இருக்கின்றதாம்
இச்செய்தி இப்பொழுது பரவுகின்றது
விடுமா அங்கிள் சைமனின் தும்பி படைகள், கத்தி கடப்பாரையுடன் கிளம்பி சென்று அந்த சிங்கள நாச்சியம்மன் கோவிலை இடித்து கச்சதீவுக்கு அப்பால் வீசிவிடமாட்டார்களா?