உண்மையில் மோடிக்குத்தான் வெற்றி

Image may contain: 1 person, suitImage may contain: 1 person, close-upஅந்த சோவியத் யூனியன்உலகை மிரட்டிகொண்டிருந்தது, உலகம் அது பெரும் சக்தி என நம்பியது. அந்த அளவு பணம், ஆயுதம்,விண்வெளி ஆராய்ச்சி என உலகை ஆட்டியது.

எல்லாம் கார்பசேவ் ஆட்சிக்கு வரும் வரைக்கும்.

கோர்பசேவ் உண்மையினை உணர்ந்தார். பிரஷ்ணோவ் காலத்திலே சோவியத்தின் பொருளாதாரம் ஓய்ந்திருந்தது. கார்பசேவ் ஆட்சிக்கு வரும்பொழுது ஒன்றுமேயில்லை. உண்ண உணவில்லாத நிலையில்தான் அத்தேசம் வறட்டு கவுரவத்திற்காக யுத்தமும், விண்வெளி, அணுசக்தி செலவுகளும் செய்துகொண்டிருந்தது.

கார்பசேவ் பல நடவடிக்கைகளை எடுத்தார், ஆனாலும் புரையோடிபோயிருந்த சோவியத்தி அவர் கொடுத்த பெரோஸ்திகா எனும் சீர்திருத்தம் எதிர்வினையாற்றியது, சோவியத் யூனியன் சிதறியது.

உண்மையில் அதன் உண்மை தன்மையினை உலகிற்கு சொன்னவர் கார்பசேவ், ஊதி பெரிதாக்கபட்டிருந்த அந்த பெரும் பிம்பத்தை அவரின் நடவடிக்கைகள் உடைத்து உண்மை முகத்தை காட்டின‌

உலகம் அந்த உண்மையினை உணர்ந்தது, ரஷ்யர்களும் உணர்ந்தனர். ஆயுதம் தூக்காமல் ரஷ்ய ராணுவமும் அமைதி காத்தது. ஆம் கார்பசேவ் செய்ததில் உண்மை இருந்தது

பின்பு நோபல் பரிசும் அவருக்கு வழங்கபட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்க்கபட்ட சோவியத் யூனியன் இப்பொழுது இல்லை எனினும் அந்த புரட்சியின் 100 ஆண்டு கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் கார்பசேவ் நினைக்கபடுகின்றார்

அவரை சோவியத் யூனியனை உடைத்தவர் என்றோ, துரோகி என்றோ, திறமையற்றவர் என்றோ யாரும் திட்டவில்லை, மாறாக உண்மையினை உணர்ந்துகொண்டார்கள்

இப்பொழுது இந்த கதை எதற்கு என்றால் விஷயம் இந்தியாவோடு பொருந்துகின்றது

கருப்புபணம் ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கைகள் விமர்சிக்கபடுகின்றன, யாரால் விமர்சிக்கபடுகின்றன பெரும் பொருளாதார சக்திகள், தொழிலதிபர்கள் என பணம் புழங்கும் எல்லோராலும் விமர்சிக்கபடுகின்றன‌

இந்திய யதார்த்தம் என்ன?

சுதந்திரம் பெற்ற புதிதில் தேர்ந்த நடத்த காந்தியும் நேருவும் டாட்டா போன்றவர்களிடம் கையேந்தும்பொழுதே இத்தேசத்தில் பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான சட்டமே இயற்றபட்டது. அந்நாளைய வளர்ச்சிக்கு அது தேவையும் இருந்தது

அந்த தொழில் வளர்ச்சியில் கருப்பு வெள்ளை என எல்லா பணமும் புகுந்து இந்திய தேச பொருளாதாரம் பெரும் பிம்பம் காட்டிற்று

தொழிலதிபர்களை, பணக்காரர்களை பகைத்துகொண்டு எந்த அரசும் ஆளமுடியாது என்பதுதான் இந்திய யதார்த்தம், காந்தி காலத்திலிருந்தே அதுதான்

மோடி சில நடவடிக்கை மூலம் அதனை மாற்ற முயன்றார், ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

வங்கிகள் பெரும் தொழிலதிபருக்கும், அரசியல்வாதிகளுக்குமே ஒத்துழைத்தனர். எல்லோரும் கருப்பை வெள்ளையாக்குவதிலே குறியாயிருந்தனர், இதில் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என எல்லோரும் உண்டு

மோடிக்கு அரசு இயந்திரம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை, ஓரளவு வழங்கிய ஆதரவில்தான் இப்படி பொருளாதார தேக்கம் வந்து நிற்கின்றது.

கார்பசேவ் நொறுக்கிய சோவியத்தின் பொய் பிம்பம் போல, இந்திய பொருளாதாரம் பற்று உருவாக்கபட்ட மாய பிம்பமும், அதனை உருவாக்கி நின்ற கருப்பு பணமும் நொறுங்கி கிடக்கின்றது.

கருப்புபணம் ஒழிக்கும்பொழுது பொருளாதாரம் பாதிக்கபடுகின்றது என்றால் அந்நோக்கம் வெற்றிபெறுகின்றது என்றே அர்த்தம், அந்த அளவில் கருப்பு பண புழக்கம் இருந்திருக்கின்றது

பாதிக்கபட்டவர்கள் கையில் மீடியா இருக்கின்றது, இன்னு பல விஷயம் இருக்கின்றது, மோடி தோற்றுவிட்டார் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், சொல்லட்டும்

கார்பசேவ் நினைத்திருந்தால் சோவியத்தின் பிம்பத்தை தொடர்ந்திருக்கலாம், முரட்டு ஆட்சி நடத்தியிருக்கலாம், மோசடி வேலை செய்திருக்கலாம்

ஆனால் அவர் சீர்திருத்தம் செய்தார், மானியங்களை குறைத்தார், வெட்டி செலவுகளை குறைத்தார், இன்னும் என்னவெல்லாமோ செய்தார் நிலமை எல்லை மீறி போயிற்று

மோடி அப்படித்தான் மானிய ஒழிப்பு முதல் இன்னும் பல விஷயங்களை செய்கின்றார், கோர்பசேவின் பெரஸ்திகாவிற்கும் மோடியின் சீர்திருத்தங்களுக்கும் வித்தியாசமில்லை

பிரஸ்னோவ் செய்த தவறுகள், சோவியத் பொருளாதாரம் மானிய திட்டங்களாலால் நாசமானதை தடுக்கத்தான் கோர்ப்சேவ் திட்டமிட்டார்.

மோடியின் நடவடிக்கைகளும் அந்த கோர்பசேவினை ஒட்டித்தான் இருக்கின்றது, மோடிக்கு என்ன வந்தது? 5 ஆண்டுகள் பொம்மை போலிருந்து சென்றுவிட அவருக்கு முடியாதா?

ஆனால் கார்பசேவ் போல சவால் எடுக்கின்றார் அல்லவா? அது நிச்சயம் கவனிக்கதக்கது.

உலகம் உண்மையினை அன்று சொன்ன கார்பசேவினைத்தான் “உண்மையான ரஷ்ய புரட்சி” செய்தவர் என சொல்லி அவருக்கு நோபல் எல்லாம் கொடுத்தார்கள்.

அப்படி மோடியினை இந்தியர் திட்டிகொண்டிருந்தாலும் மோடி செய்திருப்பது மகா துணிச்சலான காரியமே. பொய்பிம்பத்தை நொறுக்கி போட்டிருக்கின்றார்

உண்மையில் மோடிக்குத்தான் வெற்றி.

இப்படி சொன்னால் நிச்சயம் பொங்கி வந்து சாடுவார்கள், கொதிப்பார்கள். ஆனால் உண்மை என்பது இதுதான்