அதுதானே அவர் பெயர் ?

Image may contain: 1 person, sunglasses, hat and close-upசெத்து 30 வருடம் ஆனாலும் இன்னும் சில ராமசந்திர அடியார்கள், இருப்பார்கள் போல. 300 ஆண்டுகளாக இன்னும் தொடரலாம். அதனால் ராமசந்திரனை பற்றி சொல்வதை பற்றி பலர் சீறுகின்றார்கள். நிச்சயம் திருத்தமுடியாது கொஞ்சம் பேசி பார்க்கலாம் என தோன்றிற்று

நீ ஏன் தலைவரை ராமசந்திரன் என்கின்றாய்

அதுதானே அவர் பெயர்

அவரை அதிகம் கிண்டல் செய்கின்றாய், எச்சரிக்கின்றோம்

ஆனானபட்ட காந்தி முதல் இன்றைய மோடிவரை கலாய்க்கும் உலகிது, இதில் இவருக்கு என்ன விதிவிலக்கு

ம்ம்ம் கோமாளி என்றாயடா?

ம்ம் பின் எப்படி சொல்வது

அவர் புரட்சி தலைவர் தெரியுமா?

என்ன புரட்சி செய்தார்?

அது..ம்ம்..ஹ்ஹிஹீஹ் அது … அவர் புரட்சி கரமான வேடங்களில் நடித்தார்

சமுத்திரகனி கூடத்தான் புரட்சி வேடத்தில் நடிக்க்கின்றார், அப்பட்டம் கொடுக்கலாமா?

இல்லை இல்லை அவர் ஒருவர்தான் புரட்சி தலைவர்

அப்படி என்னடா புரட்சி செய்தார்? லெனினா? ஸ்டாலினால் இல்லை மாவோவா?

ம்ம்ம்.. மக்கள் அப்படித்தான் அவரை அழைத்தார்கள்

மக்கள் கொடுத்தால் அவருக்கு அறிவில்லையா? தனக்கு பொருத்தமில்லாத பட்டத்தை உலகம் கொடுத்தால் அறிவுள்ளவன் ஏற்பானா?

ஏற்கமாட்டான்,

அப்படி பலரும் சொல்லி ஒருவனுக்கு பட்டம் சூட்டினால் அது கோமாளித்தனம் அல்லவா?

ம்ம்ம் ஆனாலும் அவர் பொன்மன செல்வன், அள்ளிகொடுத்தவன்

யாருக்கு உனக்கா? உன் தாத்தாவுக்கா?

இல்லை அவர் கட்சிக்காரர், சினிமாக்காரர், பத்திரிகைகாரர்

அதாவது அவரை புகழ்பவர்களுக்கு கொடுத்தார்

ம்ம்.. ஆமாம்

அது சம்பளம், இதோ சசிகலாவிற்கும் சிலர் வருகின்றார்கள்

ம்ம் உனக்கு தெரியாது அவர் ஊழல் இல்லாதவர், சத்துணவு கொடுத்தவர்

காமரஜர் என்ன மண் அள்ளி கொடுத்தாரா? ரே கமிஷன் எனும் ஊழல் கமிஷன் ராமசந்திரன் மீது அமைக்கபட்டது தெரியும் அல்லவா?

ம்ம்ம் அவர் தாய்குலங்களின் காவலன்

அதான் மறுபடியும் மதுகடைகளை திறந்தாரா?

அய்யோ நிறுத்து அவர் ஈழபோராளிகளுக்கு அள்ளி கொடுத்தவர்

அமைதிபடை இலங்கையில் சண்டையிட்ட பொழுது ராமசந்திரன் என்ன செய்தார்

ஒன்றுமில்லை

ராஜிவ் பிரபா பேச்சின்பொழுது ராமசந்திரன் என்ன செய்தார்?

ஒன்றுமில்லை

இப்பொழுதுதான் என்னமோ சொன்னாய்?

ம்ம்ம் அது ம்ம்ம் இது வந்து அவர் இருக்கும் வரை கலைஞரால் வெல்ல முடியவில்லை

அவர் இருந்தது 10 ஆண்டுகள்தான், அதிலும் இந்திரா கொலை நடக்காவிட்டால் அவர் அன்றே சாய்ந்திருப்பார்

அவர் எவ்வளவு தீர்க்கதரிசி தெரியுமா?

எது தன் கட்சிக்கு வாரிசு இல்லாமல் விட்டு சென்றதா?

விடு, புரட்சி தலைவி பற்றி பேசாதா?

சரி அவர் என்ன புரட்சி செய்தார்?

புரட்சி தலைவருக்கு அடுத்து வந்ததால் புரட்சி தலைவி

அதுதான் புரட்சியா?

அவர் இரும்பு பெண்மணி

அபப்டி என்ன செய்தார்?

அவர் ஆங்கில அறிவு அப்படி

எமி ஜாக்சன் ஆங்கிலம் நன்றாக இருக்கும், புரட்சி தலைவி ஆக்கிவிடலாமா?

யோவ்.. போய்யா.. நிறுத்து எம்ஜிஆரை சீண்டாதே

அது என்னடா தமிழக முதல்வருக்கு ஆங்கில எழுத்து, நாங்கள் தமிழில்தான் அழைப்போம், ராமசந்திரன் அல்லது ம.கொ. ரா

எனக்கு ரத்தம் கொதிக்கின்றது மரியாதையாக புரட்சி தலைவர் என சொல்

என்ன புரட்சி செய்தார் என சொல், அதன் பின் யோசிக்கலாம்

ம்ம்ம் அது அது.. அவர் கட்சி இன்று தியாக தலைவி சின்னம்மா வழியில் செல்கின்றது.

நீ முதலில் ராமசந்திரன் புரட்சியினை சொல், சின்னம்மா தியாகம் பற்றி அப்புறம் பேசலாம்

ம்ம்ம் அது .. புரட்சி நடிப்பு

சமுத்திரகனியினை விடவா?

ம்ம்ம் அவர் தன் சொத்துக்களை தமிழகத்திற்கு விட்டு சென்றார்

பெரியார் என்ன கொண்டு சென்றாரா? 
கலைஞர் கூடத்தான் தன் வீட்டை எல்லாம் பொதுநலத்திற்கு எழுதி வைத்திருக்கின்றார், முரசொலி அறக்கட்டளை எல்லாம் வைத்திருக்கின்றார்
ம்ம் உனக்கு என்ன வேண்டும்?

அவர் செய்த புரட்சி பற்றி சொல்

விசாரித்து சொல்கின்றேன்

புரட்சி என்றால் என்னவென்று தெரியுமா?

அதனையும் விசாரிக்கின்றேன்

முதலில் அதனை செய், அதன் பின் நீ என்னை திட்ட மாட்டாய்”