சமுத்திரகனிக்கு சமூக பொறுப்பு சுனாமியாய் பொங்கியிருக்கின்றது

சமுத்திரகனி என்பவருக்கு இப்பொழுதெல்லாம் சமூக பொறுப்பு சுனாமியாய் பொங்கியிருக்கின்றது

அப்படி தொண்டன் எனும் படத்தில் பெரும் சுனாமியாக பொங்கியிருக்கின்றார், அரசியல்வாதி சட்டையினை பிடித்து தமிழ இழந்தது எவ்வளவு தெரியுமா என பொங்கியிருக்கின்றார், சந்தடிசாக்கில் ஈழத்தில் சாகும் போது என்ன செய்தீர்கள் என ஒரு வில்லன் நடிகனை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்

ஈழத்தில் நடைபெற்ற படுகொலைக்கும் காரணம் ஒரு தமிழன் என்பதை மட்டும் சமுத்திரகனி மறந்துவிட்டார்

இப்படி தமிழ் உரிமை பேசிகொண்டிருந்தவர் திடீரென ஜல்லிகட்டு பக்கம் வந்தார். எத்தனை காளைமாடு உண்டு தெரியுமா என சீறிவிட்டார்

ஏதோ ஒரு படத்தில் 100 மலர்களின் பெயரை சொல்வேன் என சூரியா ஒரே பூவிற்கு தமிழிலும் அதன் திரிபான மலையாளம், கன்னடத்தில் சொல்லபடும் பெயர்களை எல்லாம் சொல்வார் அல்லவா?

அப்படி ஜல்லிகட்டு காளைகளை வகைபடுத்துகின்றாராம்

வெள்ளைகாளை, மயிலை காளை, வெள்ளையன், கட்டை வெள்ளையன் என ஒரே இனத்தை 4 காளைஇனமாக சொல்லிவிட்டார், ஆக அவர் மூச்சு முட்ட சொன்னது வெறும் 5 வகை. ஆனால் தமிழகத்தில் மூலைக்கொரு பெயரில் ஒரே மாட்டை பல வகை மாடாக மாற்றிவிட்டார்.

அவரின் மாட்டு ஆராய்ச்சி இப்படி செல்கின்றது

செவலையன், செவலக்காளை, செவலை என்பது காவிகலரில் வரும் ஒரே மாட்டை குறிக்கின்றது. ஆனால் அன்னாருக்கு எல்லாம் ஒவ்வொரு ரகமாம்.

சில மாடுகளுக்கு சுழி இருக்கும், அது இயல்பு. அதனையும் ஒரு இனமாக்கிவிட்டார்.

மாட்டு மந்தையில் மாடுகளின் கொம்பை வைத்து அடையாளம் சொல்வார்கள், அன்னாருக்கு அதெல்லாம் தனி தனி ரகமாம்.

யார் அவரிடம் சென்று கேட்க போகின்றார்கள்? அள்ளிவிடுகின்றார்

ஆனால் அப்பொழுதே தமிழகத்தில் இருந்த சிந்தி, ஓங்கோல் போன்ற மற்ற மாநில நாட்டுமாடுகளை கவனமாக மறைக்கின்றார்

ஒரு மாட்டு விஷயத்திலே இவ்வளவு குழப்பம்

மனிதர் இன்னும் என்னவெல்லாம் குழப்புவாரோ அவருக்கே தெரியாது

ஆனால் அவரையும் பெரும் போராளியாக்குகின்றார்கள் சிலர்

வரவர தமிழகத்தில் சத்தமாக பேசும் எல்லோரும் போராளிகள் ஆகிவிடுவார்கள் போலிருக்கின்றது