தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?
தமிழர்கள் சாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்களாம், பின் ஆரியர்கள் வந்து மதத்தை கொண்டுவந்தார்களாம்
இதில்தான் பல்லவர், இன்னபிற மன்னர்கள் எல்லாம் தமிழரை அடிமைபடுத்தினார்களாம்
பின் நாயக்கர்கள் வந்து பிரித்தார்களாம், கொடுமை படுத்தினார்களாம், அடிமைபடுத்தினார்களாம்
சாதியும், மதமும் இருக்கும் வரை தமிழன் பிரிந்தே இருப்பானாம். இல்லாவிட்டால் அவன் ஒற்றுமையில் உலகையே வெல்வானாம்
இப்படி ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது, முன்பே சொன்னது போல திருச்சி வளனார் கல்லூரியின் நக்சலைட்டுகள் தயாராகும் இடமான AICUF இதை கண்காட்சியாக சொல்லிற்றாம்
இந்த அரைகுறை பைத்தியங்களுக்கு ஒரே கேள்விதான்
தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?
முன்பே அது சேர,சோழ, பாண்டிய இனமாகத்தான் இருந்தது
இதில் கடையேழு வள்ளல், முதலேழு வள்ளல், கொங்கு, தொண்டை மண்டலம் என ஏகபட்ட சிற்றரசும் இருந்திருக்கின்றது, கிட்டதட்ட 25 நாடுகள் இருந்திருக்கின்றன
ஆக தமிழகத்தில் அன்றே பல அரசுகளும், அவற்றிற்கிடையே பெரும் போர்களும் நடந்திருக்கின்றன
புறநானூறு சொல்வதெல்லாம் என்ன?
தமிழர்களுக்கு இடையே நடந்த சண்டையினைத்தான் அவை வீர காவியமாக படைத்திருக்கின்றன
தஞ்சாவூர் கல்வெட்டே சோழன் பாண்டியரை அடக்கிய விதத்தைத்தான் சொல்கின்றது
50 மைலுக்கு ஒரு அரசன், அவனுக்கு 100 மனைவி. அந்த அரசர்களுக்கு இடையே சண்டை என்றுதான் தமிழகம் இருந்திருக்கின்றது
ஈழம் மட்டும் என்ன?
அங்கும் கண்டிக்கு ஒரு அரசன், யாழ்பாணத்திற்கு ஒருவன், வன்னிக்கு ஒருவன் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்.
இதில் தமிழகம் பெரும் ஒற்றுமையாக இருந்த நாடு போலவும், அந்நியன் எல்லாம் வந்து சாதி மதமாக பிரித்து அடிமைபடுத்தியது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்
இந்த மாதிரி உளறுபவர்களிடமும், நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் AICUF அமைப்பிடமும் மாணவர்களும் இளைஞர்களும் எச்சரிக்கையாய் இருப்பது நலம்
ஜாதி மதம் கடந்து தமிழராய் இணைவோம் என்பதெல்லாம் சுத்த அரசியல், அதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதைத்தான் பழம் வரலாறு சொல்கின்றது
8ம் அதிசயமாக அப்படி ஒன்று நடந்து, 9ம் அதிசயமாக சீமான் கோஷ்டிகளிடம் அதிகாரம் சிக்கி, 10ம் அதிசயமாக தனி தமிழ்நாடு உருவானாலும் அது துண்டு துண்டாய் நிச்சயம் உடையும். அதனைத்தான் இந்த நாசமாய் போகின்றவர்கள் விரும்புகின்றார்கள்.