இதனை சொன்னால் உனக்கு பேராசை என்கிறது உலகம்
ஊரில் மாடுமேய்த்துகொண்டிருந்தேன் மாட்டுக்கு 5 அறிவு நமக்கு ஆறு அறிவு , அதற்கும் நமக்கும் பொருந்தவில்லை கல்லூரி பக்கம் வந்தாயிற்று
படித்து கணிப்பொறி பக்கம் வந்தால் அதற்கு பல அறிவு, நமது சிற்றறிவுக்கும் நமக்கும் பொருந்தவில்லை. ஆயிரம் சிக்கல்கள்
ஒத்துவருவதாக தெரியவில்லை, வேறு வேலைக்கு செல்லலாம் என்றால் அங்கு பெரும் அறிவாளிகள் எல்லாம் இருக்கின்றார்கள், அவர்கள் மிதியடியினை கூட எடுக்க நமக்கு தகுதியில்லை
நமக்கு இருக்கும் அறிவுக்கும் திறமைக்கும் மிக பொருத்தமான இடம் மாநில அல்லது மத்திய அரசின் அமைச்சர் பதவி, இப்போதுள்ளவர்கள் வரிசையில் அமர கூடிய அறிவாளி நான். அந்த நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.
நமக்கு சரிநிகர் அறிவுள்ளவர்கள் அங்குதான் இருக்கின்றார்கள்.
இதனை சொன்னால் உனக்கு பேராசை என்கிறது உலகம்.