கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்று…

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல, அதனை கொண்டாட கூடாது.

இது ஒரு மாதிரியான வியாதி, தமிழனுக்கு மதமில்லை அவன் விஜயதசமி கொண்டாட கூடாது, அவன் அதனை செய்ய கூடாது , தீபாவளி கொண்டாட கூடாது என ஏராளம்

தமிழனுக்கு மதமில்லை என யாராவது சொல்லான் ஆனால் அது சுத்த மோசடி

அகத்தியர் என்பவர்தான் தமிழ் வளர்த்தார் அவர் சிவனை வழிபட்ட சித்தர் என்பதில் என்ன சந்தேகம்?

தமிழக ஞான மரபில் அசைக்க முடியா இடம் பிடித்தோர் சித்தர்கள், அவர்கள் எல்லாம் சிவன் வழி

வட வேங்கட மலை முதல் தென் குமரி வரை தமிழ் கூறும் நல்லுலகம் உண்டு என்பது தமிழ் தொன்மையான இலக்கியம் சொல்லும் செய்தி

அதாவது திருப்பதி முதல் குமரி வரை தமிழகம், அது திருவனந்தபுரம் வரை செல்லும், இதில் எல்லாம் ஆலயம் கட்டி, அந்த பெயர்களையே அடையாளமாக வைத்தவன் தமிழன்

இன்றுவரை திருப்பதி, குமரி, திருவனந்தபுரம் எல்லாம் அந்த தெய்வங்கள் பெயராலே அழைக்கபடுகின்றன‌

தமிழ் இலக்கியமெங்கும் இந்து மத பாடலும், அதனை அடுத்து வந்த பவுத்த, சமண தாக்கமும் அதன் பின் மறுபடியும் இந்துமத பாடலும் நிரம்ப கிடக்கின்றன‌

தமிழக இலக்கியங்களே பக்தி இலக்கியம் தான்

ஆக தமிழனுக்கு மதமில்லை என்பதெல்லாம் டாஸ்மாக் போதை போதாமல் பெதடின் ஊசியில் வந்த சிந்தனைகள்.

தீபாவளி என்பது என்ன?

தீபம் + ஆவளி என்பார்கள், அதாவது தீபங்களின் வரிசை. கிட்டதட்ட நம் கார்த்திகை தீப சாயல்

ராமன் மறுபடி அயோத்தியினை அடைந்தபொழுது அம்மக்கள் தீபம் ஏற்றி மகிழ்ந்தார்கள் என்பது தீபாவளிக்கு இன்னொரு கோணம்

இந்த விளக்கேற்றி கொண்டாடுவது இந்தியாவில் மட்டுமல்ல, சீனர்களிடமும் இப்படி ஒரு பண்டிகை உண்டு

சீனம் புத்த தாக்கத்தில் சிக்கினாலும் அங்கு 100% புத்தமதம் அல்ல, இன்னும் ஏராளமான சீன மக்கள் தங்கள் கலாச்சாரத்தில் உறுதியாக நிற்கின்றார்கள், புத்தம் அவர்களை தொட முடியவில்லை

அவர்கள் கொண்டாடும் விழாக்களில் இப்படி தீபமேற்றி கொண்டாடுவதும் உண்டு, அது அப்படியே தீபாவளி சாயல்

ஆசியா முழுக்க இந்துமதம் பரவியிருந்ததன் அடையாளம் அது, சீனாவிலும் இன்னும் தடம் இருக்கின்றது

ராமன் அயோத்தி திரும்பியது, நரகாசுரன் வதம், என மொத்தமாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர்

தமிழர்கள் இந்துக்கள் என்பதால் அவர்களும் ஆண்டாண்டு காலமாய் கொண்டாடுகின்றனர்

காசிக்கு தமிழர்களும், ராமேஸ்வரத்திற்கும் குமரிக்கும் வட நாட்டு இந்துக்களும் வந்து செல்வது கால காலமான நடைமுறை

ராமன் தமிழுக்கு கம்பராமயணமாய் வந்தது போல, தீபாவளியும் அன்றே வந்திருக்கலாம்

அப்படி எல்லோரும் ஒன்றாய் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்கள், பண்டிகை என்பது ஒற்றுமையினை வளர்க்கும் ஒரு விஷயம் என்பதும் கவனிக்கதக்கது

அப்படி தீபாவளி இந்தியா முழுக்க உள்ள மக்களுக்கு மிக பெரும் ஒற்றுமையின் அடையாளம்

எல்லா இன மக்களும் சந்தோஷமாய் கொண்டாடும் விழாவில், ஒற்றுமையில் தமிழர்கள் சந்தோஷமாக கொண்டாடலாம்

எப்படியாவது தமிழனை நாசமாக்க வேண்டும் என பெரும் ஆவல் கொண்ட சிலர் கத்திகொண்டே இருப்பார்கள்

அவர்கள் எப்படிபட்டவர்கள்?

நரகாசுரன் தமிழன், அப்படியானால் சூரபத்மன்? அவனும் தமிழன்

சூரபத்மனை கொன்ற முருகன்? அவரும் தமிழ் கடவுள்

அப்படியானால் இது என்ன உட்கட்சி கொலையா என கேட்டால் பதில்ருக்காது, மாறாக‌ ராவணன் தமிழன் என்பார்கள்

ராவணன் சிவபக்தன் அல்லவா? தமிழனுக்கு மதமில்லை என்றால் ராவணன் சிவனடியார் ஆனது எப்படி? அவன் பிள்ளைகள் பெயரெல்லாம் வடமொழியில் இருப்பது எப்படி என்றால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது

ஏதாவது ஒன்றை சொல்லி மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் பண்டிகைகளை குழப்பி பிரிவினையினை வளர்ப்பது இவர்கள் வழக்கம்

அவர்களை தூர தள்ளிவிட்டு மக்கள் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடட்டும்

சில கிறிஸ்தவன் இருப்பான், அய்யகோ தீபாவளிக்கு இந்துக்கள் தரும் பலகாரம் சிலைக்கு படைக்கபட்டது, அய்யோ அது மாபெரும் தவறு என்றெல்லாம் உறுமுவான்.

இப்படி செய்வதுதான் கிறிஸ்தவர்களை அந்நியபடுத்தும், அவர்கள் மேல் வெறுப்பு வரசெய்யும், நல்ல கிறிஸ்தவன் அதற்கு இடமளிக்க கூடாது.

இயேசு பைபிளில் என்ன சொல்லியிருக்கின்றார்?

“வயிற்றுக்குள் செல்லும் எதுவும் உன்னை தீட்டுபடுத்தாது” என பகிரங்கமாக சொல்லியிருக்கின்றார்

ஆக அடம் பிடிக்கும் கிறிஸ்தவர்களே, இந்து மக்கள் தரும் எல்லா பலகாரங்களையும் மகிழ்வோடு உண்டு அவர்களின் தீபாவளியில் சந்தோஷமாக பங்கெடுக்கலாம், இயேசு ஒன்றும் கோபபடமாட்டார்