நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான்
நியூஸ் 18, பெண்களில் சாதித்தோரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றது. ஜெயா செத்துவிட்டதாலும் சசிகலா சிறையில் இருப்பதாலும் அவரை அழைக்கவில்லை
இன்னும் மெடிக்கிள் மிராக்கிளாக விளங்கும் உஷா ராஜேந்தரையும் அழைக்கவில்லை
இதுதவிர மற்ற சாதனை பெண்களை அழைத்திருக்கின்றார்கள், அதில் தலைவி தவிர்க்க முடியாதவர் என்பதால் அவரும் கவுரவிக்கபட்டிருக்கின்றார்
நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான்
தன் நெடிய போராட்டத்தை சில நொடிகளில் சொல்லி உலகுவாழ் பெண்கள் அனைவருக்கும் உற்சாகம் கொடுத்திருக்கின்றார் குஷ்பூ
உணர்ச்சிகரமான விஷயம் அது, பொதுவாக மேடைகளில் கம்பீரம் காட்டுவது குஷ்பூவின் முகம். உணர்ச்சிகளை பெரிதாக வெளிபடுத்தமாட்டார்
ஆனால் இந்த வீடியோவில் அவர் கண்கள் லேசாக கலங்குகின்றன, அது அவர் கண்ட போராட்ட வாழ்வினை சொல்கின்றது
தலைவி கண்கள் கலங்கினால் நமக்கு கடன்பட்ட நெஞ்சம் போல் இதயமே கலங்குகின்றது
30 வருடம் அல்ல, மூவாயிரம் வருடமானாலும் இனி உம் பெயர் இங்கு அழியாது பொன்விளக்கே
இன்னும் கொஞ்சகாலம்தான் , அதன் பின் முதல்வராக அல்லது மத்திய அமைச்சராக இதே கூட்டத்திற்கு நம் தலைவி திரும்ப வருவார் என சங்கம் சத்தியம் செய்கின்றது.
“கலங்காதே ராசாத்தி, காலம் இருக்கு”