நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

Image may contain: 1 person, smiling

தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் தேர்தல் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே, பல வகையான காரணங்களை சொல்வார்கள்,

அதனில் முதலானது நரகாசுர வதம். இன்னொன்று ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை.

மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள்.

இன்னும் ஒரு தீபாவளி நாளில்தான் அமிர்தசரஸ் பொற்கோயிலை கட்ட அடித்தளமிட்டார்கள் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை, அவர்களும் சிறப்பிப்பார்கள்.
இவ்வாறாக சகல மக்களும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை, ஒளி வந்தது அல்லது இருள் அகன்றது,தீமை அகன்றது என்பதனை குறிக்கின்றது.

தீமைகள் நம்மை விட்டு அகலவேண்டும் என்பதற்காக முதல்கடமையாக எண்ணெய் குளியலை கட்டாயமாக்கி வைத்திருக்கின்றது.

அவ்வகையில் நமது நண்பர்களின் இல்லங்களிலும் தொழிலிலும் தீமைகள் அகலட்டும், நன்மைகள் பெருகட்டும் என வாழ்த்துவோம்.

பல நண்பர்கள் தீபாவளிக்காக பெரும் பயணத்தில் இருப்பார்கள், அவர்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துவோம்.

குடும்பத்தோடும், சொந்தங்களோடும்,சொந்த மண்ணில் தீபாவளி கொண்டாடுவது ஒரு பெரிய வரம்.

உறவுகள் ஒன்றாகி கொண்டாடும் தருணத்தை விட மேலான‌ சொர்க்கம் எங்கு இருக்கின்றது??

பாதுகாப்பான பயணமும், ஆரோக்கியமான உணவும் அமைந்து எல்லோரும் தீபாவளியினை மகிழ்ச்சியாக கொண்டாட வாழ்த்துக்கள்.

தேசத்தில் இம்மாதிரி பண்டிகைகளை ஒற்றுமையினை வளர்க்கும் விஷயமாக எடுத்துகொள்ளவேண்டும், எல்லா மக்களும் இணைந்து கொண்டாடுவோம்

இந்து சகோதரர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்து, அவர்கள் மகிழ்வினை இரட்டிப்பாக்குவோம்

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

 

Image may contain: night