இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்?
இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்? , அவர் இல்லாமல் திமுக நடக்காதா ஹிஹிஹி இதுதான் வளர்ச்சியா ஹோஹோ என சிலர் சிரித்துகொள்கின்றார்களாம், சொல்பவர்களில் பாதி பாஜகவினர் மீதி இம்சை கோஷ்டி.
இதன் பெயர் எதிர்பார்பு அல்ல, அவர் இல்லாவிட்டால் கட்சி அழிந்துவிடும் என்பதல்ல
இதன் பெயர் நன்றிகடன்
பாஜக எனும் கட்சியினை வளர்க்க தன் உயிரை பணயம் வைத்த அத்வாணியினை விரட்டிவிட்டு எங்கிருந்தோ வந்த மோடி, யோகி, ராம்நாத் வாழ்க என சொல்லி கொண்டிருப்பவர்களுக்கு நன்றி என்றால் என்னவென்று தெரியுமா?
நிச்சயம் தெரியாது
ஜெயா ஆஸ்பத்திரியில் படுத்த உடனே அடுத்து என்ன செய்வது என அன்றிரவே டெல்லியுடன் உடன்படிக்கை பேசியவர்களுக்கும் நன்றி என்றால் என்னவென்று தெரியுமா?
அது எப்படி தெரியும்? ராமசந்திரனே நன்றிகெட்டுத்தான் தனி கட்சி கண்டார்
வளர்த்த சசிகலாவிற்கு நன்றி கொன்றுவிட்டு இப்பொழுது பதவியில் இருப்பதும் அந்த கொள்கையே
ஆனால் திமுகவினர் நன்றியுள்ளவர்கள். கட்சிக்கு அத்தலைவன் கொடுத்த உழைப்பிற்காய் அனுதினமும் அவனை போற்றும் நன்றிமிக்கவர்கள்
அந்த நன்றியில்தான் அவரை கொண்டாடுகின்றார்களேயன்றி, அவர் இனி வந்து தாங்க போகின்றார் என்பதல்ல..
இன்னொன்று கலைஞர் உழைத்தவர் , இன்னும் உழைக்க துடிப்பவர். இன்று உடல்நலம் ஒத்துழைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் அதிர்வுகளை கொடுப்பவர்
அவ்வகையில் அந்த ஆச்சரிய மனிதரை கொண்டாடுகின்றார்கள்
அது சரி பாஜகாள், அந்த மனிதரை ஏன் வலுகட்டாயமாக ஓய்வெடுக்க சொல்கின்றீர்கள்?
அந்த அளவு அவருக்கு அஞ்சிசாகின்றீர்கள், அவர் பேசதொடங்கினால் உங்கள் பேச்சு நின்றுவிடும், அவர் நடக்க தொடங்கினால் நீங்கள் எல்லாம் ஓடவேண்டும் எனும் பயம்தானே?
அதனை நேரடியாக சொன்னால்தான் என்ன?
உலகிற்கே தெரிந்த இந்த ரகசியம் நீங்கள் மூடிகாப்பதாக நினைத்தால் யாருக்கு தெரியாது?