ஸ்மூலி வந்தபின் எல்லோரும் பாடகர் ஆகிவிட்டார்கள்…

முகநூல் வந்தபின் எல்லோரும் எழுத்தாளன் ஆகிவிட்டான், டைப் செய்ய தெரிந்தவன் எல்லாம் எழுத்தாளன் என ஒரே அழிச்சாட்டியம், இதில் போராளி எனும் இம்சை வேறு

அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அடுத்த கொடுமை

இந்த ஸ்மூலி என்பது வந்தபின் எல்லோரும் பாடகன் பாடகி ஆகிவிட்டார்கள், இன்னும் பாடாதது தமிழிசை கோஷ்டியும் பன்னீர்செல்வம் கும்பலும்

அவர்களை தவிர எல்லோரும் பாடகர்களாக ஆகிவிட்டது

இந்த கொடுமையினை நாம் சகிக்கலாம், ஆனால் இளையராஜா எப்படி சகிப்பார்?. தன் பாடல் தன் கண்முன்னே கதற கதற கொத்தபட்டு அவர் காதில் ஈயமாய் ஊற்றபட்டபின் அந்த மகா கலைஞனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?

ஸ்மூலியில் என் பாடல் வரகூடாது என அவர் சொன்னதின் அர்த்தம் சத்தியமாக இதுதான், நாம் அவரை பலமாக ஆதரிக்கின்றோம்

எழுத்தாளன் , போராளி, கவிஞன் இம்சைகளில் இப்பொழுது இந்த ஸ்மூலி பாடகர் இம்சைகள்

டெங்கிகொசு இதனை கேட்டுவிட்டுத்தான் தமிழ்நாட்டிற்கு படையெடுத்திருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது.