புல்டோசர் ஜனதா பார்ட்டி

தாஜ்மகாலை முறைக்க தொடங்கிவிட்டது பாஜக கோஷ்டி. நாளொரு தகவலை சொல்லிகொண்டே இருக்கின்றது

ஏற்கனவே இப்படி சொல்லி சொல்லித்தான் பாபர் மசூதியினை இடித்து தள்ளினார்கள்

எல்லாவற்றையும் இடிப்போம் என கிளம்பும் இது, புல்டோசர் ஜனதா பார்ட்டி போல..

தாஜ்மஹாலுக்கு இப்போது ஆபத்து இல்லை எனினும் அதனை கடும் காவலில் வைப்பது நல்லது, இவர்களுக்கு சிவசேனா பரவாயில்லை வெள்ளையன் கட்டிய ரயில் நிலையத்திற்கு சிவாஜி பெயரை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள், இடிக்க கிளம்பவிலை

சரி இது வட இந்திய பிரச்சினை

தென்னிந்தியாவில் சிக்கல் இல்லை, ஆனால் தமிழிசை அடிக்கடி ஜார்ஜ் கோட்டையில் காவிகொடி என சொல்லிகொண்டே இருக்கின்றார்

அக்கோட்டை மீது அவருக்கு ஒரு கண் இருப்பது தெரிகின்றது

அது நடக்கபோவதில்லை எனும் ஆத்திரத்தில் அந்நியன் கோட்டை இங்கே எதற்கு என கடப்பாரை தூக்கிவிடுவாரோ என்னமோ, கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கின்றது.


கொசுறு

மோடி இருக்கும் வரை, அ.தி.மு.க., வை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அட அமைச்சரே, அடிமை சாசனத்தை இப்படியா பகிரங்கமாக வாசிப்பது?

மோடியே வரும் வருடங்களில் இருப்பாரா இல்லையா என்பது தெரியாது, நாடெங்கும் அவ்வளவு அதிருப்தி நிலவுகின்றது

ஒருவேளை மோடி கவிழ்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? எமக்கு புரிகின்றது

நிச்சயம் சின்னமாவிடம் ஓடிவிடுவீர்கள்

ஆக இப்போதைக்கு நீங்கள் அதிமுக மோடி அணி, அதுதானே விஷயம். ஓகே