தமிழ் சினிமாவிற்காக ராகுல்காந்தி குரல்கொடுத்திருப்பது அவருக்கு கறையே..
ஆயிரம் சமாதானம், காரணம் சொன்னாலும் தமிழ் சினிமாவிற்காக ராகுல்காந்தி குரல்கொடுத்திருப்பது அவருக்கு கறையே..
யாரோ தவறாக வழிகாட்டி அந்த அப்பாவி ராகுல் சிக்கவைக்கபட்டிருக்கின்றார்.
ராகுல் இதற்கெல்லாம் வந்திருக்க கூடாது, நிச்சயம் கூடாது
இனியாவது அவர் விழித்துகொள்ளட்டும்,
விஜய் செய்திருப்பது பெரும் தவறு, இல்லாத பொய்களை அள்ளிவிட்டது பெரும் தவறு, சட்டபடி தண்டிக்க கூடிய விஷயம்
நிச்சயம் அந்த அட்லியினை பிடித்து 3 மாதம் சிறையில் தள்ளவ்வேண்டிய விஷயம் இது, பொய்யான செய்திகளை பரப்புதல் என்பது சாதாரணம் அல்ல
அப்படிபட்ட காரியத்திற்கு ராகுல் குரல்கொடுத்தார் என்பது நிச்சயம் பெரும் அவமானம்
அரசியல் கணக்கிற்காக குரல் கொடுப்பது எல்லாம் விஜய் குடும்பத்திடம் நடக்காத கதை, ஆனானபட்ட ஜெயலலிதாவே அவர்களிடம் பெப்பே வாங்கிய கோபத்தில்தான் படாதபாடு படுத்தினார்
எஸ்.ஏ சந்திரசேகரின் சூழ்ச்சியில் காங்கிரஸ் சிக்கிவிட கூடாது, அது காங்கிரசுக்கு நல்லது அல்ல
எப்படியோ அகில இந்திய காங்கிரஸின் தலைவர் ஒரு தமிழ் சினிமா சர்ச்சையில் வாலண்டியராக வந்து குதிக்கின்றார் என்பது அக்கட்சியின் தரத்தை குறைத்தே இருக்கின்றது