எச் ராஜா.. அன்புமணி… தமிழிசை…. ஸ்மூலி…..
இந்த எச்.ராசாவிற்கு மோடி ஆட்சிக்கு வந்ததும் உற்சாகம் தாளவில்லை, அதுவும் கலைஞரும் ஜெயாவும் இல்லா நிலையில் தானே தமிழக முதல்வர் போலவும், தமிழகத்தை காக்கும் பொறுப்பு தான் ஒருவனுக்கே இருப்பதாகவும் நினைத்து கொண்டார்
யாரையாவது வம்புக்கு இழுப்பது, யார் மீதாவது கல் வீசி சிரிப்பது என உற்சாகமாக சென்று கொண்டிருந்தது அவரின் தற்போதைய வாழ்வு
அப்படி சில இடங்களில் கல்வீசிய அவரை, விஷ வண்டு கூட்டில் கல் எறிந்து சிக்கலில் சிக்க வைத்திருக்கின்றார் தமிழிசை
இனி எச்.ராசாவிற்கு விழும் கொட்டுகளும் அவருக்கு வீங்க போகும் வீக்கமும் கொஞ்சமாக இருக்காது, குறைந்தபட்சம் கொஞ்ச நாளைக்காவது அவர் அமைதி காத்தே தீரவேண்டும்
ஆக அக்கா தமிழிசையின் திட்டம் மாபெரும் வெற்றி, மிஸ்டர் ராசா, அக்காண்ணா சும்மா இல்லை
அக்கா டா ….. ஒரிஜினல் தமிழச்சிடா
அன்புமணி அமைச்சராக இருந்தபொழுது மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த ககன் தேசாய் பலநூறு கோடிகளை அடித்த நிலையில் அந்த்த துறை அமைச்சராக இருந்த அன்புமணி எவ்வளவு அடித்திருப்பார் : எடப்பாடி பழனிச்சாமி
இதற்கு அன்புமணி என்ன பதில் சொல்ல போகின்றார் என தெரியவில்லை, கலைஞராக இருந்தால் எப்படி கலாய்பார் தெரியுமா?
“சிறையில் இருக்கும் சசிகலாவே பல கோடி ரூபாய்கள் அடித்திருக்கின்றார் என சொல்லபடும் நிலையில், அவருக்கு கீழிருந்த இந்த பழனிச்சாமி எல்லாம் கை சுத்தமானவரா?
அந்த நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கு பாயாமல் இருந்திருக்குமா?
இப்பொழுது கூட விஜயபாஸ்கரிடமிருந்து ஏராளமான பணங்களை வருமானவரித்துறை கைபற்றியது, அவரிடமே அவ்வளவு இருந்தது என்றால் முதல்வரிடம் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்
பழனிச்சாமி ஓதுவதெல்லாம் வேதம் ஆகுமா? உடன்பிறப்பே
பாஜகவிற்கு விஜயினை வளைக்கும் திட்டமில்லை : தமிழிசை
அதானே, ரஜினியினை வளைக்கும் முயற்சி இன்னும் முடியவில்லை என்பதால் விஜயினை எல்லாம் பாஜக முயற்சி செய்யாது என்கின்றார் தமிழிசை.
அதே நேரம் விஜயினை நொறுக்க பாஜக நினைக்கவில்லை என தமிழிசை சொல்லாததும் கவனிக்கதக்கது
இந்த ஸ்மூலி வந்தபின் ஏராளமான கல்பனா அக்காக்கள் உருவாகிகொண்டிருப்பதால், நமது சிரிப்பிற்கு உரியவரும் பெரும் நகைச்சுவை பாடகியுமான கல்பனா அக்கா இந்த சமூகத்தை விட்டு தூரமாக சென்றுகொண்டிருக்கின்றார் என்பதுதான் சோகம்
எனினும் ஒரு பாடலை எப்படி கொலையாய் கொல்லலாம் என கடும் ஆராய்ச்சியில் பாடும் ஸ்மூலி பாடகர்களுக்கு அவர்தான் முன்னோடி அதில் சந்தேகமே இல்லை