ஸ்பெயினின் கட்டலோனியா விவகாரம்

No automatic alt text available.

உலகெல்லாம் எல்லா நாடுகளிலும் பிரிவினை கோஷம் உண்டு, எந்த நாடும் தன் நாடு பிரிய அனுமதிக்காது.

ஒரு நாடு உருவாக பல காரணிகள் அவசியம், உள்நாட்டு சூழல், சர்வதேச நிலவரம் , உலக நாடுகள் ஆதரவு என ஏராளமான விஷயங்கள் உண்டு

நாடுகளும் தந்திரமானவை, அவற்றில் தனிநாடு கேட்கும் இனங்களும் விவேகமான நடவடிக்கை எடுத்தாலன்றி இலக்கினை அடைய முடியாது

அப்படி பல நாடுகள் தங்கள் நாட்டில் பிரிவினை பேசுபவர்களுக்காக சில தன்னாட்சி உரிமைகளை வழங்கும்

இது உங்கள் ஏரியா, இது உங்கள் உரிமை என சிலவற்றை கொடுப்பார்கள். தனிநாடு இல்லைதான் ஆனால் தனிநாட்டிற்கான முதல் படி அதுதான்

உலகில் இப்படி ஏராளமான பகுதிகள் உண்டு, ஈராக்கின் குர்துகள் உட்பட பல இனங்கள் தன்னாட்சியில்தான் வாழ்கின்றன, இப்பொழுது இன்னொரு இனத்தின் விஷயமும் உலகை உலுக்கின்றது

அது ஸ்பெயினின் கட்டலோனியா விவகாரம்

ஐரோப்பாவில் தனி இனத்திற்கான 100% சுத்தமான நாடு என எதுவுமில்லை. ஹிட்லர் அதற்கு ஆசைபட்டு நாசமாய் போனான், பல நாடுகள் பல இனங்களின் தொகுப்பாகவே வாழ்கின்றன அதிலொன்று ஸ்பெயினின் கட்டலோனியா.

அது சிறிய பகுதியாயினும் ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற புகழ்மிக்க பகுதி அங்குதான் இருக்கின்றது. ஒலிம்பிக் எல்லாம் அங்குதான் நடக்கும், அது போக கால்பந்தாட்ட அடையாளம் அது, மெஸ்ஸி கூட அங்குதான் விளையாடுவார்

எல்லாவற்றிற்கும் மேலாக குஷ்பூ சென்று சுற்றிபார்த்து படமெல்லாம் எடுத்த அழகு பூமி.

தன்னாட்சி பகுதியாக அறிவிக்கபட்டு இருக்க்கும் அப்பகுதியில் இப்பொழுது தனிநாடு கோஷம் எழுகின்றது. ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி முதல் பல காரணம் என்கின்றன செய்திகள்

கட்டலோனியா அரசு வாக்கெடுப்பெல்லாம் நடத்திற்று, மக்களும் ஆதரித்தனர். ஆனால் ஸ்பெயின் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இனி கட்டலோனியா அரச பிரதிநிதியினை விடுவதாக இல்லை எனும் அளவிற்கு சீறுகின்றது ஸ்பெயின்

ஆனாலும் தன்னாட்சி பிரதேசம் தனிநாடு ஆக என்ன தடை? என சில குரல்களும் கேட்கின்றன. பார்க்கலாம்

கவனியுங்கள், என்றோ ஸ்பானிய வல்லரசு உலகை மிரட்டும்பொழுது ஸ்பெயின் பெரும் சக்தியானது அப்பொழுது அதன் பகுதியானது கட்டலோனியா

ஆனால் தங்கள் அடையாளம் இழக்காவண்ணம் தன்னாட்சி பெற்றார்கள், உலகெல்லாம் பல இனங்கள் இப்படித்தான் முதல் படி பெற்று அதில் நின்று போராடுகின்றன.

நாங்கள் வீரமும் மானமும் மிக்கவர்கள், அடைந்தால் நாடு இல்லை சுடுகாடு என பிரபாகரன் ஸ்டைலில் கட்டலோனியா சென்றிருந்தால் இந்நேரம் இக்குரல் எழும்பியிருக்க முடியாது.

விவேகம் மகா அவசியம்

ஈழத்தில் இப்படியான அடித்தளத்தை அமைத்துகொடுக்கத்தான் இந்தியா விரும்பியது, அப்படி நடந்திருந்தால் பின்னொரு நாளில் ஈழகுரல் மிக வலுவாக அமைய அது மிக்க உதவியாயிருந்திருக்கும்

ஆனால் புலிகளால் எல்லாம் நாசமாயிற்று

இனி சில உரிமைகளை பெறவே முடியாத அளவு ஈழம் நாசமாயிற்று.

கட்டலோனியா, குர்து, பாலஸ்தீன் விவகாரங்களை எல்லாம் கவனித்தால் அவை எல்லாம் பல உரிமைகளை பெற்று, எல்லைகளை வகுத்து இதுதான் எங்கள் ஏரியா என உலக நாடுகள் ஒப்புகொள்ளும், சொந்த நாடும் ஒப்புகொள்ளும் வகையில் பலமாக இருக்கின்றன‌

ஈழத்தில் அப்படி ஏதுமில்லை, எந்த எல்லையும் வகுக்கபடவில்லை. புலிகளின் மேப்பினை சீமான் ஏற்றுகொள்ளலாம் உலகம் ஒப்பாது

ஈழவிடுதலையினை புலிகள் எந்த அளவு நாசமாக்கியிருக்கின்றார்கள் என்பது பல நாடுகளின் இனங்கள் போராடும் பொழுது கவனித்தால் புரிகின்றது.

இந்தியா எவ்வளவு அருமையான முயற்சி எடுத்திருக்கின்றது, அமைதி படை வீரர்களும் அருமை தலைவன் ராஜிவ் போன்றோர் உயிர் கொடுத்தெல்லாம் அதற்கு போராடியிருக்கின்றார்கள் என்பது புரிகின்றது

ஆக ஈழத்தை கெடுத்தது சாட்சாத் புலிகள், ஆனால் இங்கு சில கும்பல் இன்னும் இந்தியா, காங்கிரஸ், கலைஞர் என சொல்லிகொண்டே இருப்பான்

அவனை எல்லாம் மெர்சல் விவாதங்களில் கலந்துகொள்ள வைத்து சாகடிக்க வேண்டும்.