விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!
விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!
அப்பொழுதே சொன்னோம், எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் திட்டத்தோடு காய் நகர்த்துபவர். இப்பொழுது கலைஞர் தளர்ந்த நிலையில், ஜெயா இல்லா நிலையில் விஜயகாந்த் போன்றோர் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் விஜயினை பெரும் பிம்பமாக அவர் வளர்க்க நினைப்பார் என எப்போதே சொல்லியிருந்தோம்
மிக சரியாக வந்து நிற்கின்றார் பார்த்தீர்களா?
ஆனால் வந்ததும் காமெடி செய்துவிட்டார், அதாவது விஜயின் கோபம் அவரின் படங்களில் வெளிப்படுகின்றதாம்
அம்மா… புரட்சி தலைவி அம்மா.. என் படம் வெளிவர உதவுங்கம்ம்ம்ம்ம்மா என அவர் அழுதபொழுதே அவரின் சமூக கோபத்தை உலகம் தெரிந்துகொண்டது
இப்பொழுது விஷால் அலுவலகத்தில் ரைடு என சொல்லி உங்களை மறைமுகமாக எச்சரிக்கின்றார்கள் அல்லவா?
அதில் உங்கள் சமூக கோபம் நன்றாக தெரிகின்றது மிஸ்டர் சந்திரசேகர்.