நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி, ஆக இந்த காவல்துறையின் அஜாக்கிரதையால் ஒரு குடும்பம் அழிந்திருக்கின்றது.

சந்தேகமே இல்லை, இது கொலை. கொலைக்கு தூண்டியது யாரெனில் அந்த கந்துவட்டி கும்பல் பாதி, அதை தடுக்க தவறிய காவல்துறை மீதி இவர்கள்தான் காரணம்

காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் பழனிச்சாமி

அவர் என்ன செய்கின்றார்? எங்கோ அவர் முன்னும் சிலர் கொளுத்தி சாக முயன்றார்களாம்

மக்களை காக்க தவறும் இந்த அரசு பதவி விலக வேண்டும் என்றோ, கட்டபஞ்சாயத்துக்கு துணைபோகும் மக்கள் விரோத‌ அரசு நீக்கபட வேண்டும் என்றோ இன்னும் குரல் எழும்பவில்ல்லை, ஏனென்று தெரியவில்லை

இப்பொழுதெல்லாம் அதிமுக அரசுக்கு வக்கலாத்து வாங்குவது தமிழக பாஜகவினர்தான்

ஆனால் இவ்விஷயத்தில் மகா அமைதி

சொல்லமுடியாது, ராமர் ஆட்சியில்தான் சீதையே தீகுளித்தார். அதனால்ராமர் போல சிறப்பான ஆட்சியினை பழனிச்சாமி கொடுக்கின்றார் என அறிக்கை வாசித்தாலும் வாசிப்பார்கள்

இந்த நெல்லை தீகுளிப்பிற்கு காரணம் அந்த கந்துவட்டி கும்பலுக்கு துணைபோன காவல்துறை. இதற்கு உள்துறை அமைச்சர், முதலமைச்சர் என பழனிச்சாமி பதில்சொல்லியே தீரவேண்டும்