மூதேவி, மூதி, மோதி, மோடி எல்லாம் ஒரே பெயரை குறிக்குமாம் !!!

உலகில் பலவிதமான ஆராய்ச்சி நடக்கின்றது, சிலர் புதிதாக ஆராய்வார்கள், சிலர் பழம் விஷயங்களை ஆராய்வார்கள்

அப்படி பழம் விஷயங்களை ஆராயும் தமிழர், புது விஷயத்திற்குள் நுழைகின்றார்கள், அதாகபட்டது கிட்டதட்ட முப்பாட்டன் நரகாசுரன் கதைதான்

அதாவது மூதேவி என்பவள் பெரும் தெய்வமாம், அவள் விரட்டபட வேண்டியவளே இல்லையாம். எல்லாம் பின்னாளில் வந்த திரிபாம்

ஆனால் அவ்வையாரும், வள்ளுவனும் மூதேவியினை திட்டுகின்றார்களே என கேட்டால், அது அப்பொழுதே ஆரியன் புகுந்து திரித்துவிட்டான் என்கின்றார்கள்

தமிழர் மழைகடவுள் மாரியாம், அது பின்னர் வருணன் என மாற்றபட்டதாம்.

அப்படி மூத்த தேவி என்பவள் மூதேவி ஆகி ஓதுக்கபட்டவள் ஆகிவிட்டாளாம்

இப்படி ஏகபட்ட ஆராய்ச்சி, மூதேவி என்பவள் வணங்கபட வேண்டியவள், அவள் தமிழர் தெய்வம் என்றேல்லாம் குதித்தார்கள்.

இதோடு நிறுத்திவிட்டால் பரவாயில்லை, ஒப்புகொண்டிருக்கலாம், ஆனால் அதிதீவிர ஆராய்ச்சியில் சிக்கிவிட்டார்கள்

இந்த ராவணன், நரகாசுரன் போல மூதேவிக்கும் இவர்களால் வாழ்வு வரும் என நினைத்தால், அய்யகோ சறுக்கிவிட்டார்கள்.

ஆம், மூதேவி என்பது இருக்கும் இடம் உருப்படாது என சொல்ல வைக்கின்றார்கள்

மூதேவி என்பவள் இருக்குமிடம் உருப்படாது, அது உண்மைதான். அவ்வையும் வள்ளுவனும் சொன்னதே உண்மை என சொல்லவைத்துவிட்டார்கள்.

எப்படி?

அதாவது மூதேவி எனும் வார்த்தை மூதி என மாறி, 
மோதி என மாறி பின் மோடி என்றும் மாறிவிட்டதாம்

மோடி எனும் வார்த்தை மூதேவி எனும் வார்த்தையிலிருந்து வந்ததாம்

மூதேவி, மூதி, மோதி, மோடி எல்லாம் ஒரே பெயரை குறிக்குமாம்.

இனி சொல்ல என்ன இருக்கின்றது?

ஆக மூதேவி இருக்குமிடம் உருப்படாது என்ற அவ்வையின் வாக்கு சரி, முன்னோர்கள் சொன்னதும் சரி என்பதை இனி ஆராய்ச்சி செய்தா நிரூபிக்க வேண்டும்?

“மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்”