பாரதமாதா கோவில் கட்டகோரி உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது

பாரதமாதா கோவில் கட்டகோரி உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது, இன்னும் விடுதலை செய்யபடவில்லை

இதுபற்றி இன்னும் தமிழிசை வாய்திறக்கவில்லை என்பதுதான் அவரின் கடமை உணர்விற்கு பெரும் சாட்சி

தந்தையும் தன் அரசியல் ஆசானுமான அனந்தனின் கைதை கூட கண்டிக்கமுடியாமல் கடமை உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார் அக்கா

ஏம்மா, அவர் என ஜெயலலிதா கோவிலா கேட்டார்? பாரதமாதா கோவில்தானே அதை கட்ட ஒரு குரல் கொடுத்தால்தான் என்ன?

மிஸ்டர் குமரி அனந்தன், இதென்ன கோரிக்கை?

ராமர் கோவிலோ அனுமார் கோவிலோ கட்ட நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடனே நடக்கும், பாரத மாதாவிற்க்கெல்லாம் இவர்கள் ஹீஹிஹிஹிஹிஹ்

முதிர்ந்த வயதில் இப்படி உண்ணாவிரதம் இருக்கும் குமரி அனந்தனை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?

இப்படி சொல்லலாம்

அய்யா, உங்கள் கோரிக்கைபடி பாரதமாதா ஆலயம் கட்டுவார்களாம் ஆனால் மூலவராக அமித்ஷா சிலையும், உற்சவராக மோடி சிலையும் இருக்குமாம்

துவாரபாலகர் சிலைக்கு சிக்கலே இல்லையாம், தமிழிசை சிலை இருக்குமாம், போதுமா?

மனிதர் இனி பாரத மாதா கோவில் பற்றி பேசுவார்?