பாஜக‌ தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் மோதல்

தமிழிசை உட்பட பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் அருகே பாஜக‌ தொண்டர்கள், விடுதலை சிறுத்தைகள் மோதல் , பதிலடி கொடுக்க தயார் என தமிழிசை அறிவிப்பு

சுத்த அறிவுகெட்ட கட்சி ஒன்று தமிழகத்தில் உண்டென்றால் நாம் தமிழருக்கு அடுத்தபடியாக இந்த விசிக‌

பாஜகவே காலில் இல்லா கட்சி, அதனால் நிற்க கூட முடியாது

யாராவது தங்களை அடித்து பெரிய ஆளாக ஆக்க மாட்டார்களா, அல்லது அனுதாபமாவது கிடைக்காதா என ஏங்கி திரியும் கட்சி

ஒருவர் விடாமல் வம்பிழுத்து பார்க்கின்றது, ஆனால் கோவில் வாசலில் இருக்கும் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை பார்ப்பது போல பலம் வாய்ந்த கட்சிகள் பரிதாபமாய் சில்லறை போட்டுவிட்டு திரும்புகின்றன‌

இப்படியாக அரசியல், சினிமா என எங்கேல்லாம் வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் வம்பிழுக்க முடியுமா என அலையும் கட்சி அது

அதனிடம் சென்று தங்கள் வீரத்தை காட்டியிருக்கின்றன விசிக குஞ்சுகள்.

முன்பெல்லாம் பாமகவிடம் தான் வம்பிழுப்பார்கள் இப்பொழுது அவர்களிடம் எல்லாம் செல்வதில்லை.

ஆக இந்த சண்டையினை பார்க்கும்பொழுது 
ஒரு குருடன் காலில்லாதவனை போட்டு அடித்ததை பார்ப்பது போல இருக்கின்றது.


கொசுறு

ஜி.எஸ்.டி. வரியில் மாற்றமா?: நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்

இந்த அரசின் முக்கிய அறிவிப்புகளை எல்லாம் மோடிதான் வெளியிடுவார், வெளியிட்டுவிட்டு புதிய இந்தியா பிறந்தது என சொல்லிகொள்வார்

என்ன ஆனதோ தெரியவில்லை, இம்முறை அருண் ஜெட்லிக்கு வாய்பளித்துவிட்டார்

ஆக பெரும் கசப்பான அனுபவங்கள் பிரதமருக்கு கிடைத்திருக்கின்றன.