யாழ்ப்பாண நூலகத்துக்கு அரிய நூல்கள் நன்கொடை : முதல்வர் பழனிச்சாமி
யாழ்ப்பாண நூலகத்துக்கு அரிய நூல்கள் நன்கொடை: தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி
இங்கிருக்கும் அண்ணா நூலகம் செயல்பட விடாமல் ஜெயா தடுத்தது கொஞ்சமல்ல, அது நாசமானது
அதனை எல்லாம் கவனிக்காத பழனிச்சாமி, கன்னிமாரா நூலகத்தை கவனிக்காத பழனிச்சாமி யாழ்பாண நூலகத்திற்கு நன்கொடை அளிக்கின்றாராம்.
அதானே, இங்கிருக்கும் நூலகத்தில் அதிமுகவினர் என்று வாசித்தார்கள். அந்த வழக்கம் தான் அவர்களுக்கு அறவே கிடையாதே
பின் அதிமுக முதல்வர் யாழ்பாணத்திற்கு நூல் வழங்கினால் என்ன? வடகொரியாவிற்கு கொடுத்தால் என்ன?
பழனிச்சாமி அப்படி சிந்தித்திருப்பார் போல, கட்சிகாரனை பற்றி அவருக்கு தெரியாததா? அக்கட்சிக்காரன் உருப்படியாக வாசித்தால்,, சிந்தித்தால் பழனிச்சாமி முதல்வராகியிருக்க முடியுமா?
அதனால் தமிழன் வாசிக்கவே கூடாது என முடிவு செய்துவிட்டார் போல..
கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு
ஆமா சார், அப்படித்தான்
உங்க ஆட்சியில் குடிநீர் கிணறையே மக்களுக்கு தரமாட்டேன், தந்தால் விலைக்குத்தான் தருவேன்னு சொன்னவங்கல்லாம் துணை முதலமைச்சரா இருக்காங்க சார்
அவரே துணைமுதலமைச்சர் என்றால், மற்றவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்?
அதனால் கடும் நடவடிக்கை எடுங்கள் சார்..