பொது போக்குவரத்தை அதிகபடுத்த சிங்கப்பூர் முடிவு

கார்களுக்கு கடும் கட்டுபாட்டை விதித்து , பொது போக்குவரத்தை அதிகபடுத்த சிங்கப்பூர் முடிவு

சிங்கப்பூரில் கார்களால் சாலை நெருக்கடி, வாகன தரிப்பிட நெருக்கடி, இன்னபிற சிக்கல்கள் இருப்பதால் கட்டுபாடுகளை அதிகரித்துகொண்டே போகின்றார்கள்

இந்தமாதிரி கார் தான் இயக்க வேண்டும், இத்தனை வருடம் தான், இவ்வளவு சாலை வரி, இத்தனை அளவு பாதுகாப்பு வரி என கடும் நெருக்கடிகள்

ஏனென்றால் மேற்சொன்ன காரணங்களுக்காக, அதாவது மக்களே நாங்கள் டிரெயினிலோ பஸ்ஸிலோ போகின்றோம், சைக்கிளில் போகின்றோம் என அலறி ஓடுவதற்காக‌

சிங்கப்பூர் அரசு சொல்லிவிட்டால் அவ்வளவுதான், அதனை எதிர்த்து போராட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், டிவிட்டரில் சீற்றம் , முகநூலில் சர்ச்சை என்பதெல்லாம் முடியாத விஷயம்

இதோ சென்னையிலும் போக்குவரத்து நெருக்கடி, தமிழக அரசு இப்படி அறிவித்துவிட முடியுமா?

என்னாகும்?

என்னது தமிழன் கார் வைத்துகொள்ள உரிமையில்லையா? அவன் பராரியாக மெட்ரோ ரயியிலும், பேருந்திலும் செல்ல வேண்டுமா?

முடியாது, முடியாது இது சர்வாதிகாரம், இது அழிச்சாட்டியம் , சட்டத்தை மீறுவோம் கோட்டையில் கார் ஓட்டுவோம் என கிளம்பிவிட மாட்டோமா?

நிச்சயம் செய்வோம்

அடுத்த நாட்டு முன்னேற்றங்களை மட்டும் பார்க்கும் தமிழன், அடுத்த நாட்டு மக்களுக்கே உரித்தான பொறுப்புணர்ச்சியினை மட்டும் கவனிக்க மறந்துவிடுவான், அந்நாட்டு அரசுகள் செய்யும் இறுக்கமான காரியங்களையும் கவனிக்கமாட்டான்

மாறாக சும்மா சிங்கப்பூர், ஸ்வீடன்,கனடா என கத்திகொண்டே இருப்பது.