தீ குளிப்பதுதான் வழி என மக்கள் கிளம்பும் முன் அரசு விழித்துகொள்வது நல்லது

கந்துவட்டி கொடுமையின் உச்சத்தை தமிழகம் கண்டே விட்டது, இதனை போல இன்னும் பல கொடுமைகள் உண்டு

அதில் தற்போது நடந்துகொண்டிருப்பது ஓடைகள் ஆக்கிரமித்தல், குளங்களை ஆக்கிரமித்தல், பொது பாதைகளை அடைத்தல்

இந்த திருப்பணி இப்பொழுது தமிழகம் முழுக்க நடைபெற்றாலும் தென் தமிழகத்தில் மகா அமோகம்

குளங்களின் ஓரங்கள், அதற்கு செல்லும் பாதைகள் எல்லாம் அதிகாரிகள் துணையுடன் மூடபடுகின்றன. அதில் கம்பிவேலி கட்டி அடைத்துவிடுகின்றார்கள்

என்ன செய்துவிடமுடியும் மக்கள்?

மூடிவிட்டு தெனாவெட்டாக சொல்லுகின்றார்கள், முடிந்தார் கோர்ட்டுக்கு போங்கள்

கோர்ட்டில் வழக்கு என்னாகும் என்பதற்கு ஜெயலலிதாவே சாட்சி, அது தீர்ப்புவந்து பாதையோ குளமோ மீட்கபடுவதற்குள் பல ஜென்மம் முடிந்துவிடும்

ஆக இதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை

இது எப்படி நடக்கின்றது? சில கருப்பு ஆடுகளுக்கு லஞ்சம் கொடுத்து , செய்ய வேண்டிய திருத்தங்களை செய்து புதிய வரைபடம் தயாரித்துவிடுகின்றார்கள், இன்னும் என்னவெல்லாமோ தரிகிடதோம் நடக்கின்றது.

ஏகபட்ட கிராமங்கள் குளங்களையும், ஓடைகளையும் அதிகாரிகள் துரோகத்தால் இழந்துகொண்டிருக்கின்றன‌

ஒரு தாலுகா அலுவகத்தில் ஒரு குளத்தின் எல்லை, நீர்வழி வரைபடங்கள் இருக்காதா? நொடியில் தீரும் பிரச்சினைக்கு எதற்கு கோட் செலவுகள்?

அரசு நிலத்தை மீட்க, அரசாங்க நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கும் கொடுமை உலகில் எங்காவது உண்டா?

எப்படிபட்ட பைத்தியகார தனமான நாடாகிவிட்டது இந்தியா? எவ்வளவு பெரும் கொடுமை இது.

ராதாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு எல்லாம் அப்பகுதி கிராம மக்கள் இப்படி குளத்தை மீட்டுதாருங்கள், பாதைகளை திறங்கள் என்றேல்லாம் மனுகொடுக்கும் காட்சிகள் பத்திரிகைகளில் வருகின்றன‌

நடவடிக்கையினைத்தான் காணோம்

சில இடங்களில் நான் அதிமுக, என்னை என்ன செய்துவிட முடியும் இம்மக்கள் எனும் மமதையில் பலர் ஓடைகளையே அடைப்பதாக செய்தி

இதுபற்றி விவரம் வேண்டுமானால் Senthil Nadar என்பவரை தொடர்பு கொள்ளலாம், பெரும் பொருட்செலவில் தேவையில்லா வழக்கினை நடத்துபவர் அவர்தான்

அரசு ஓடையினை, பொது ஓடையினை மீட்கும் செயலை அவர் செய்துகொண்டிருக்கின்றார்.

நெல்லை பகுதியில் குறிப்பாக ராதாபுரம் தொகுதிகளில் கந்துவட்டி கொடுமை உண்டு, கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு ஆசிரியரே உயிரிழந்தார்

அது போக நில அபகரிப்பு, ஊர் குளத்தை மூடுதல், ஓடையினை அடைத்தல் என மொத்த மக்களையும் இம்சிக்கும் காரியங்கள் தொடர்கின்றன‌

விரைவில் மொத்த கிராம மக்கள் தீக்குளிப்பு எனும் செய்திகள் வரலாம்

பழனிச்சாமி அரசு முன்னமே விழித்துகொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது நல்லது, இல்லையெனில் கிராமங்களே தீக்குளிக்கலாம்

இராதாபுரம் தொகுதியில் இம்மாதிரி அட்டகாசங்கள் நிறைய என்கின்றார்கள், முன்னாள் MLA அப்பாவு அட்டகாசமாக அரசியல் செய்யும் நேரம் இது.

ஆனால் அவரோ மகா அமைதி

ஒருவேளை மு.க ஸ்டாலின் அப்பக்கம் வரும்பொழுது இவற்றை எல்லாம் காட்டி பெரும் கவனத்தை ஈர்ப்பாரோ என்னமோ?

அப்படி செய்தால் அப்பாவு அவர்களுக்கு ஆதரவு இன்னும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

ஏராளமான கிராமங்கள் பாதிக்கபட்டு கொண்டிருக்கின்றன, இதனால் பல கிராமங்களின் அமைதி கெட்டு கொண்டிருக்கின்றது, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

அரசு நிலத்தை அரசு மீட்க வேண்டுமா? இல்லை அதிகாரிகள் துணையோடு தனியார்கள் அடைக்க அதனை பொதுமக்கள் மீட்க வேண்டுமா?

மீட்டு கொடுக்க வேண்டியது அரசின் கடமை

கிராமங்களின் உயிரே குளங்களும் ஓடைகளும் தான். அவை இல்லாத நிலையில் அக்கிராமங்கள் எப்படி வாழ முடியும்?

மொத்தமாக தீ குளிப்பதுதான் வழி என மக்கள் கிளம்பும் முன் அரசு விழித்துகொள்வது நல்லது.