தனி நாடு கனவுகள்

தனிநாடு என கிளம்பிய குர்துகளை ஈராக்கிய ராணுவம் ஈரானின் ராணுவ துணையோடு போட்டு சாத்துகின்றது. முக்கிய இடங்கள் கைபற்றபட்டுவிட்டன இனி குர்துகளுக்கு தனிநாடு என்பது பழையபடி கனவு

ஐஎஸ் இயக்கத்தை விரட்ட குர்துகளை கையாண்ட உலகம், ஐஎஸ் வீழ்ச்சிக்கு பின் கைவிட்டுவிட்டது

ஸ்பெயினின் கட்டலோனியா தனிநாடு என அம்மக்கள் கிளம்பிய நேரத்தில் கட்டலோனியா அரசையே கலைத்து மிரட்டுகின்றது ஸ்பெயின்

கட்டலோனியாவும் இனி கனவாக தொடரும்

இதுதான் உலக யதார்த்தம். வெறும் வீரமும் , குவிக்கும் பணமும் வெற்றி கொடுக்காது, நாடு அடைய ஆயிரம் காரணங்களும் சூழ்நிலையும் அவசியம்

இது புரியாமல் பெரும் அழிவினை உண்டாக்கியதுதான் புலிகளின் பிடிவாதம்.

குர்துக்களுக்கும், கட்டலோனியருக்கும் தன்னாட்சியாவது இருக்கின்றது ஈழ தமிழருக்கு அதுவுமில்லை

தமிழீழத்தை நாடுகடத்தியதை தவிர புலிகளின் சாதனை ஒன்றுமில்லை