கவன குறைவால் சிறிய தவறொன்று நடந்துவிட்டது

அந்த செய்தி எல்லா மீடியாக்களிலும் வந்தது, பொதுவாக உலக செய்திகளை சொல்லும் ஆங்கில மீடியாக்கள் மிக சில, அவைதான் மூலம்

அந்த மூலத்திலிருந்து உலகெல்லாம் இருக்கும் சிறுபத்திரிகைகள் எடுத்துகொள்ளும் , அப்படி அந்த சவுதி 6 பெண்கள் விவகாரமும் உலகெல்லாம் பரவிற்று

நேரமின்மையால் எமது கவன குறைவால் சிறிய தவறொன்று நடந்துவிட்டது, அதற்கு மன்னிப்பு கோருகின்றோம், முழுக்க ஆங்கில செய்திகளை படித்தபின் உண்மை புரிந்தது நடந்தது இதுதான்

விவகாரம் என்னவென்றால் பிறந்தநாள் சம்பவம் நடந்து ஒருவருடம் ஆகின்றது, வழக்கின் தீர்ப்பு இப்பொழுதுதான் அறிவிக்கபட்டது

அந்த ஆண்நண்பர்களை எச்சரித்து விடுவித்தவர்கள், இப்பெண்களின் தலையினை வெட்ட தீர்ப்பளித்துள்ளார்கள்

தீர்ப்பு எழுதிய ஷரியா குழுவில் முழுக்க ஆண்கள் என்பதாலும், இது மனித உரிமையினை மீறிய செயல் என்பதாலும் உலகம் கண்டிக்கின்றது. ஐ.நா மனித உரிமை அமைப்பெல்லாம் கண்டிக்கின்றது

நிலவரம் இதுதான், எப்பொழுதும் அப்பெண்கள் தலை வெட்டபடலாம் என்பதால் உலகம் முழுக்க கண்டனம் எழுகின்றது

இந்த தலைவெட்டு எப்பொழுதும் நடக்கலாம்

மறுபடியும் சொல்கின்றோம், இந்த தீர்ப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில்தான் நாமும் முழுக்க கவனிக்காமல் சொல்லிவிட்டோம்,

மன்னிப்பு கோருகின்றோம்

ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை

என்னதான் இந்திய மக்களாக நண்பர்களாக இருந்தாலும் அந்நிய நாட்டு இஸ்லாமிய விவகாரம் என்றால் சிலர் ஒருமாதிரித்தான் குதிக்கின்றார்கள், இது எமக்கு புதிதல்ல‌

முன்பு கஜினி முகமது பற்றி எழுதியிருந்தேன். அவன் கஜினியும் அல்ல ரஜினியும் அல்ல. காஸ்னி அல்லது கஸ்னி என்பது ஆப்கனின் ஒரு ஊர், அந்த ஊரின் மன்னன் முகமது

அவன் 17 முறை படையெடுத்த கதையும், சோமநாதபுரியினை கொள்ளையிட்ட கதையும் உலகறிந்தது

சோமநாதபுரியில் கொள்ளையிட்ட செல்வத்தை அவன் கஸ்னி கொண்டு சென்று அணை எல்லாம் கட்டினான், இன்னும் பல விஷயங்களை செய்தான்

ஆனால் அச்செல்வங்களை கொண்டு உருவாக்கபட்ட ஆப்கன் நிலைக்கவில்லை , பெரும் சாபமே தொடர்ந்தது

செங்கிஸ்கான் முதல் இன்றைய அமெரிக்கா வரை எத்தனையோ வல்லரசுகள் அவர்களை வாழ வைக்க நினைத்தாலும் முடியவில்லை. ஏதோ ஒன்று அவர்களை விடாமல் துரத்துகின்றது

அந்த காஸ்னியில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயம் இதுபற்றி எழுதினேன்

அவ்வளவுதான், என்னது கஜினி கொள்ளையனா? அவன் மகா உத்தமன் , அவனை பற்றி எழுதி கலவரம் ஏற்படுத்துகின்றாயா? உன்னை விட மாட்டோம், எங்கே எஸ்பி? எங்கே கமிஷணர்? என மிரட்டினார்கள்

சாதாரண மிரட்டல் அல்ல, மிக பயங்கரமான மிரட்டல்கள்

அப்படி என்ன சொல்லிவிட்டேன்? கஜினி இங்கு வந்து கொள்ளையடித்தான் என சொன்னேன். அதுதான் தவறாம் மாபெரும் தவறாம்

இதனால் இந்தியாவில் ரத்த ஆறு ஓட நான் காரணமாகிவிடுவேனாம், எப்படி எல்லாம் மிரட்டினார்கள் என்பது என் மனசாட்சிக்கு மட்டும் தெரியும்

கஜினி முகமது கொள்ளையிட்டான் என சொல்ல கூட உரிமையில்லா இந்தியனா நான் என மனம் நொந்த நாட்கள் அவை.

அந்த அளவு மதவெறி அவர்களை ஆட்டிபடைத்தது. ஒரு கொள்ளையனை கொள்ளையன் என சொல்ல கூடாதா? அவன் இஸ்லாமியன் என்பதால் புனிதமாகிவிடுவானா?

கஜினி என்ன சோமநாதருக்கு பொங்கல் வைக்க இங்கு வந்தவனா?

ஆக அவர்களின் ஆப்கன் பாசம் அவ்வளவு இருந்திருக்கின்றது என்பது அன்றுதான் புரிந்தது. ஆப்கனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தி உறவா? இல்லை வேறு உறவு

அப்படித்தான் இன்று சவுதி விவகாரத்திலும் குதிக்கின்றார்கள்

சவுதியில் தலைகள் வெட்டபடுவதே இல்லையா? மனித உரிமைகள் மீறபடுவதே இல்லையா?

எங்கோ அரேபியாவில் நடக்கும் அல்லது நடக்கபோகும் சம்பவத்திற்கு இங்கிருந்து ஏன் என்னிடம் குதிக்க வேண்டும்

இவர்கள் பாசமும் மரியாதையும் அங்குதான் இருக்கின்றதா? சவுதியின் கவுரவம் மீது இவர்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை?

சொல்பவர்கள் ஏய் ஸ்டான்லி ராஜன் எனும் மதவெறியனே, அங்கே தீர்ப்புதான் வந்திருக்கின்றது என சொன்னார்களா என்றால் இல்லை, மாறாக அபப்டி சம்பவமே இல்லை என வரிந்து கட்டுகின்றார்களாம்

சவுதி பற்றி சொல்லபடுவதெல்லாம் கட்டுகதையாம், ஆதாரம் வேண்டுமாம். நான் என்ன அந்த தலைகளோடு வரமுடியுமா? அல்லது அந்த குழுவோடு வரமுடியுமா?

ஆனால் குஜராத்தில் 5 லட்சம் இஸ்லாமியரை மோடி தனி மனிதனாக எரித்தது மட்டும் உண்மையாம் இவர்கள் அருகிருந்து பார்த்தார்களாம்

இஸ்ரேலை கண்டித்தால் ஓடிவருகின்றார்கள், பாலஸ்தீனத்தில் அது செய்யும் அட்டகாசங்களை சொன்னால் கண்ணீர் சிந்துகின்றார்கள்

ஆனால் சவுதி பற்றி சொன்னால் குதிக்கின்றார்கள்.

இந்த மதவெறி பிடித்தவர்களை, சாதி வெறி பிடித்தவர்களை எல்லாம் நட்பு பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவாயிற்று, அவர்களாக செல்லட்டும்.

உங்களோடு விவாதித்து சண்டையிட நான் ஒன்றும் எச்.ராசா அல்லது அர்ஜூன் சம்பத் அல்ல‌

நாட்டுபற்றும் , கொஞ்சமேனும் மனிதாபிமானம் இல்லாமலும் , இந்திய குடிமகனாகவும் உணர்வெல்லாம் எங்கோ இருக்கும் எவனும் இங்கு தேவையில்லை

4 பேர் இருந்தாலும் நாட்டுபற்று மனிதாபிமானமிக்கவர்கள் இருந்தால் போதும்