குஷ்பூ எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்

தலைவி எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார் என்பது இன்னும் வெளியிடபடவில்லை

தமிழிசை போன்ற வெளிகட்சியினர், சில உட்கட்சியினர் இன்னும் ஏராளமான எதிரிகளை கொண்ட தலைவி குஷ்பு தங்கியிருக்கும் மருத்துவமனை ரகசியமாக‌ இருப்பது நல்லது என சங்கம் திருப்தி கொள்கின்றது

ஒருவேளை அந்த மருத்துவமனை பெயர் அறிவிக்கபட்டால், திரளும் கூட்டத்தினை கட்டுபடுத்தி தகுந்த பாதுகாப்பினை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என எச்சரிக்கின்றோம்.

தேவைபட்டால் வெளிநாட்டு மருத்துவம் அளிக்கவும் சங்கம் கோரிக்கை வைக்கின்றது.

தலைவி நலம்பெற்று திரும்பும் வரை, நீரும் அருந்தா உண்ணாவிரத்ததை சங்கத்தார் மேற்கொண்டு உலகெங்கும் பிரார்த்தித்து வருகின்றனர்.

மகா முக்கியமாக தலைவிக்கு வலிக்காமல் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்கள் கேட்டுகொள்ளபடுகின்றார்கள்