தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள்
தலைவி காலில் அடிபட்டு விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஞ்ச காலமாகவே அவரின் காலில் அடிபட்டு வருவது கவலையளிக்கும் விஷயம், பொதுவாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி ஆகும் என்பார்கள்.
தலைவி அடுத்த தேர்தலில் அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் என பெரும் பொறுப்புக்களை ஏற்க இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் திருஷ்டி ஏற்பட்டு, விரும்பதகாத சம்பவங்கள் நடக்கின்றன
தலைவி விரைவில் நலம்பெற வேண்டியும், அவரின் கம்பீர நடை திரும்ப வரவேண்டியும் சங்கமும், சங்க உறுப்பினர்களும் உலகெல்லாம் உள்ள ஆலயத்தில் வேண்டிகொண்டிருக்கின்றனர்
சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்றன
தலைவி காலில்பட்ட அடியினை சங்க உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்கள் காலிலே பட்ட அடியாக உணர்ந்து துடிக்கின்றனர்
இது இரண்டாம் முறை என்பதால், தலைவிக்கு ஏதும் ஆபத்தினை எதிரிகள் உண்டாக்குவார்களோ என கருதி அதனை விசாரிக்க இஸ்ரேலிய உளவுதுறையினை நாடும் திட்டமும் உள்ளது.
கண்திருஷ்டி கழிக்கும் சாங்கியங்கள் பற்றி பின் சாஸ்திரிகளுடன் விவாதித்து அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்
90% கண் திருஷ்டி போட்டது இந்த நயன் ரசிகர் மன்ற அலப்பறைகள் என்பது உலகறிந்தது. அவர்களின் கொள்ளிக்கண் தான் காரணம், மீதி கொள்ளிகண் காங்கிரஸ் பிரமுகர்களாக இருக்கலாம்.
இப்போதைக்கு தலைவி நலம்பெற வேண்டும், அது விரைவில் நடக்கும்
தலைவி கடவுள் நம்பிக்கை இல்லாதோர் ஆயினும், கோடிகணக்கான ரசிகர்கள் கண்ணீரோடு மன்றாடுவதால் கடவுள் நிச்சயம் இறங்கி வருவார்.
உலகெல்லாம் பெரும் கண்ணீருடம் கடும் பிரார்த்தனை நடக்கும்பொழுது அந்த ஆண்டவன் மனம் இறங்காமல் போய்விடுவானா?
விரைவில் சங்கத்து உறுப்பினர்கள் தலைவியினை சந்தித்து நலம் விசாரிப்பார்கள,
இப்பொழுதெல்லாம் மருத்துவமனைகள் மீது பலத்த சந்தேகம் உள்ள காலங்கள், அதனால் தலைவி மருத்துவம் பெறும் படங்கள் வெளியிடபடவேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது