வடதமிழ்நாடு வேண்டும்…

வடதமிழ்நாடு வேண்டும் என சிலர் கேட்க தொடங்கியிருக்கின்றார்களா, கேட்பவர்கள் பாமக என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

அது வெகுநாட்களாக ராமதாஸ் எழுப்பிவரும் கோரிக்கை, இனி அதுவும் சாத்தியபடாது என்றால் தைலாபுரம் தோட்டத்தையாவது தனிமாநிலம் ஆக்க முடியுமா என்ற அளவு அவர் கோரிக்கை செல்லும்

அதை தவிர அன்புமணியினை முதல்வராக்க அவரிடம் எந்த வழியுமில்லை

ஆனால் தனி வடதமிழ்நாடு கேட்டுகொண்டிருக்கும் அந்த தமிழர்கள் யார் என்றுதான் தெரியவில்லை

வட தமிழ்நாடு என்னமோ வடை போல கிடைக்கும் என நினைத்துகொண்டிருக்கின்றார்கள்

ஒன்று நிச்சயம்

தனி தமிழ்நாடு அது இது என பேசிகொண்டிருந்தால் இப்படித்தான் வரும், காரணம் அன்றே பல துண்டுகளாகத்தான் தமிழகம் இருந்தது

எவண்டா அவன் “திராவிடத்தால் விழுந்தோம் உறவே” என சொல்லிகொண்டிருப்பது

திராவிடம் எதனை எல்லாம் காத்தது என்பது இனிதான் புரியும்

இப்போதைக்கு இந்த வடை தமிழர்கள் யார் என தேடிகொண்டிருக்கின்றோம்

மிஸ்டர் சைமன், உலகளாவிய அகண்ட தமிழகம் படைக்க நீர் கிளம்பியிருக்கும்பொழுது குறுக்கே கட்டையினை போடும் இவர்களை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டீரா?