கென்னடி கொலை வழக்கு – அவிழாத முடிச்சுகள்
உலகில் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு விதமாக அரசியல் செய்வார்கள் போல
டிரம்ப் என்பவருக்கு சில சிக்கல்கள், சோவியத் யூனியனே நெருங்க பயந்த அமெரிக்காவினை வடகொரியா அசால்ட்டாக சீண்டுவது, தேர்தலில் ரஷ்ய தலையீடு எல்லாம் மனிதருக்கு தலைவலியாயிற்று
நெருக்கடி நேரங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்பது அரசியல் நீதி
அப்படி டிரம்ப் என்ன செய்கின்றார் என்றால், கென்னடி கொலை தொடர்பான கோப்புகள் வெளியிடபடும் என சொல்லிவிட்டார்
அவ்வளவுதான் அமெரிக்க கவனம் கென்னடி கொலை மர்மம் மீது திரும்பிற்று
கென்னடி அமெரிக்கர்களின் ஆதர்ச நாயகன், இந்தியாவின் இந்திரா போல அதிரடிக்காரர். அவர் செய்த பல துணிச்சல் மிக்க செயல்கள் அமெரிக்கர்களிடையே அவரை கொண்டாட வைத்தது
அந்த கென்னடி 1963ல் கொல்லபட்டார், மக்கள் வரவேற்பளிக்க திறந்த காரில் சென்றபொழுது உயரமான கட்டடத்தில் இருந்து சுடபட்டு அங்கேயே இறந்தார்
அவரை சுட்டு கொன்றவனை பிடித்தார்கள் விசாரித்தார்கள் அவன் பெயர் ஆஸ்வால்ட், அவனை இன்னொருவன் சுட்டான் அவன் பெயர் ரூபி, அவனை விசாரித்தால் அவன் மனநோயாளி என்றான், சட்டம் என்ன செய்யும், கையினை பிசைந்தது
இன்றுவரை முழு மர்மம் தீரா வழக்கு அது.
அந்த வழக்கு தொடர்பாக பல மர்மங்கள் எழுந்தன, இது அமெரிக்க உட்கட்சி விவகாரம், கத்தோலிக்கரான கென்னடியினை பிரிவினைவாத கிறிஸ்தவம் கொன்றது, சிஐஏ விஷயம் , ரஷ்ய சதி, அமெரிக்க கொலைமுயற்சியில் தப்பிய காஸ்ட்ரோ சதி என ஏகபட்ட மர்மம்
அந்த கோப்புகளில் பல பிற்காலங்களில் வெளியிடபடவேண்டும் என்ற கோரிக்கை அப்பொழுதே இருந்தது, இப்பொழுது சில பகுதிகளை டிரம்ப் வெளியிட சொல்லியிருக்கின்றார்
அதில் கென்னடியினை சுட்ட ஆஸ்வால்ட் அமெரிக்க கடற்படைவீரன் என்றும் பின் சில குற்றங்களுக்காக தண்டிக்கபட்டவன் என்றும் பின் சோவியத் யூனியன் சென்றதும், காஸ்ட்ரோவினை சந்தித்தது எல்லாம் வருகின்றன
அந்த சர்ச்சைகுரிய சோவியத் ஏவுகனைகளை கென்னடி துணிச்சலாக அப்புறபடுத்தியதற்கும், காஸ்ட்ரோவினை குறி வைத்ததற்கும் பதிலடியாக கென்னடி கொல்லபட்டிருக்கலாம் என்ற அளவு செய்திகள் செல்கின்றன
இது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்துகின்றன, சமீப காலமாக சீரடையும் அமெரிக்க கியூப உறவுகளை கெடுக்க நடக்கும் சதி என்கின்றது கியூபா
கென்னடி கொலையில் கியூபா சம்பந்தபட்டது எனபது நெடுநாளாக வரவியிருக்கும் முணுமுணுப்பு ஆனால் நிரூபிக்கபட்ட சாட்சி என ஏதுமில்லை
கென்னடி கொல்லபட்ட 4 ஆண்டுகளில் சே குவேரா கொல்லபட்டது எல்லாம் அடுத்த விஷயங்கள்
டிரம்பும் முழு அறிக்கையினையும் வெளியிடவில்லை, சில பகுதிகளை மட்டும் அனுமதித்தார், அதிலே விவகாரம் பற்றி எரிகின்றது
எப்படியோ கென்னடியினை கொன்றது சோவியத் துணையுடன் கியூபா என்பது போல் செல்கின்றது விஷயம்.
தன் நாட்டின அருகே சோவியத் ஏவுகனைகளை நிறுவ முயன்றபொழுது துடித்தெழுந்த கென்னடி பின் மர்மமாக கொல்லபட்டார்
இந்தியா அருகே இலங்கை திரிகோணமலையில் அமெரிக்க தளம் அமையமுயன்றைதை தடுத்த ராஜிவ் காந்தியும் மர்மமாக கொல்லபட்டார்
ஆனால் இந்திய புலனாய்வுதுறை மிக திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காட்டியது
கென்னடி கொலைபோல ராஜிவ் கொலையும் முடிவு தெரியாமல் போக வேண்டும், தெரிந்தாலும் பல சிக்கல்கள் வருவது போல் அமையவேண்டும் என திட்டமிட்டனர் புலிகள்
கென்னடி கொலையில் முழு அறிக்கையும் வராது, காரணம் திட்டமிட்டவர்கள் நுணுக்கம் அப்படி.
அதே நுணுக்கம் தான் ராஜிவ் கொலையிலும் நடந்தது, கென்னடி போலவே ராஜிவும் பாதுகாப்பில் அக்கறை இல்லாதவர், இருவருமே மக்களோடு மக்களாகவே கலந்து நின்றவர்கள்
ஆனால் கென்னடி கொலை மிக சிலரால் நடந்தது
ராஜிவ் கொலையில் சிவராசன் நளினி, பேரரிவாளன், அரிபாபு என பெரும் பட்டாளத்தையே ஈடுபடுத்தினான்
தான் பெரும் கெட்டிகாரனாக நினைத்து அவனே அவனை அறியாமல் செய்த தவறு அது
ஆனால் அந்த தவறுதான் ராஜிவ் கொலையின் முடிச்சை அவிழ்த்தது
கென்னடி கொலையின் அறிக்கைகள் சில பரபரப்புகளை உலகெலாம் ஏற்படுத்தியிருக்கின்றது, இன்னும் ஏற்படுத்தலாம்