ஏன் இப்படி சறுக்கினார் ஸ்டாலின்?

அரசியலில் சில விஷயங்கள் மகா முக்கியம், 24 மணிநேரமும் மக்களால் ரகசியமாக மனதிற்குள் கண்காணிக்கபடுபவர்கள் தலைவர்கள்

கலைஞர் அதில் மகா வித்தகர், புள்ளிவிவரம் இல்லாமலோ 100% உறுதியான தகவல் இல்லாமல் பேசவே மாட்டார், அது புராணமோ, இலக்கியமோ, வரலாறோ எதுவோ, மிக சரியாக இருப்பார், சொன்ன வார்த்தையினை, ஏற்றுகொண்ட நிகழ்ச்சியினை உரிய காரணமின்றி அவர் மறுத்தவர் அல்ல‌

தன் தந்தை மறைந்த செய்தியும், முதல் மனைவி இறந்த செய்தியும் அவருக்கு அவர் பேசிகொண்டிருந்த மேடையில்தான் சொல்லபட்ட்டது, அப்ப்பொழுதும் பேசி முடித்தபின்பு தான் மேடை விட்டு இறங்கினார்

அப்படி எல்லாம் மக்கள் மனதில் இடம்பிடித்தார் கலைஞர்

ஸ்டாலின் எழுச்சி பயணம் செய்வதாக அறிவிக்கபட்டது, தமிழகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மழை காரணமாக அது ஒத்திவைப்பு என்றார்கள்

சரி சென்னை மழை நிலவரத்தில் அவர் என்ன செய்கின்றார், அதுவும் கோபாலபுரத்தில் நீர்புகுந்த நேரம் எப்படி ஒரு வாய்ப்பு என எதிர்பார்த்தால் அவர் லண்டனுக்கு சென்றுவிட்டாராம், அதுவும் துபாயில் உற்சாக கூட்டம் வேறு

லண்டன் பயணம் உடல்நிலை காரணம் என்றால் ஏன் நவம்பர் 7 எழுச்சி பயணம் அறிவிக்க வேண்டும்? அப்படி செல்ல நேர்ந்தால் ரகசியமாக சென்றால் என்ன?

உடல்நலம் நன்றாக இருப்பதாக ஜிம் காட்சிகளை எல்லாம் கசியவிட்டு, துபாயில் ஊர் சுற்றுவிட்டு லண்டன் செல்வதெல்ல்லாம் அவர் உடல்நலம் நன்றாக இருப்பதாக சொல்கின்றது

ஆக அட்டகாசமாக அரசியல் செய்யும் நேரத்தில் மக்களை ஏதோ நினைத்தால் ஒழிய அவர் இப்படி செய்ய முடியாது என தொடங்கிவிட்டனர் எதிர்கட்சிகள்

அவர்களுக்கு ஸ்டாலினை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தாயிற்று, ஸ்டாலினே உருவாக்கி கொடுத்துவிட்டார்

ஏன் இப்படி சறுக்கினார் ஸ்டாலின்?, அடுத்து மக்களுக்கு தன்னை தவிர ஏதும் வழியில்லை என நினைத்துவிட்டாரோ என்னமோ?

அப்படி நினைத்திருந்தால் அது மிகபெரும் தவறென அவர் உணரும் காலம் வரும்.