உபியில் ஜெர்மனி சுற்றுபயணி மீது தாக்குதல்

உபியில் ஜெர்மனி சுற்றுபயணி மீது தாக்குதல்

அந்த உபி என்ன நினைத்துகொண்டிருக்கின்றது என்பது விளக்கபட வேண்டும், யோகி முதல்வரானால் அது இந்து ராஜ்ய நாடாகிவிடுமா?

அப்படியும் வெளிநாட்டு சுற்றுபயணிகளை தாக்குவது என்ன நியாயம்?

சமீபத்தில்தான் சுவிஸ் தம்பதியினை தாக்கினார்கள், அதற்குள் இப்பொழுது ஜெர்மன் பயணி தாக்கபட்டிருக்கின்றார்

இனி என்னாகும், கமல் சொன்னதைத்தான் ஐரோப்பாவும் சொல்லும், வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது

இது தொடர்ந்தால் இந்தியாவில் “இந்து பயங்கரவாதிகள்” தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால் ஐரோப்பியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என சொல்ல்ல எவ்வளவு நேரமாகும்?

ஒருவேளை ஐரோப்பா அப்படி அறிவித்துவிட்டால் கமலஹாசன் ஐ.நா சபையில் தான் சொன்னதை முழங்கி உண்மையிலே “உலக நாயகன்” ஆகிவிடுவார்

இந்திய அரசு அவசரமாக விழித்துகொள்வது நல்லது