காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது?

காந்தி ஏழைபெண் கொடுத்த செப்பு காசினை இறுதிவரை தன்னோடு வைத்திருந்தார் : விகடன் செய்தி
அதாவது லட்சகணக்கில் எல்லோரும் கொட்டி கொடுத்தார்களாம், ஆனால் ஒரு மூதாட்டி கொடுத்த செப்பு காசு காந்தியினை கவர்ந்ததாம்
அவள் இருப்பதை எல்லாம் எனக்கே கொடுத்தாள் என சாகும் வரை கையில் வைத்திருந்தாராம்
இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் சொல்லவுமில்லை, எங்கும் கேள்விபட்டதுமில்லை
ஆனால் பைபிளில் ஒரு ஏழைபெண் செப்புகாசு காணிக்கை இட்டதை கண்டு இயேசு , “இவளே அதிகம் கொடுத்தவள் நீங்கள் எல்லாம் கிள்ளி கொடுத்தீர்கள், இவள் மொத்தமும் கொடுத்தாள்..” என சொன்ன வரி இருக்கின்றது
ஆக காந்திபற்றி எழுதுவதற்கு புதிதாக யோசியுங்கள், பைபிள் கதை எல்லாம் காந்தி வாழ்வில் நடந்தது என எழுதினால் விகடனின் தரத்தை பார்த்து உலகமே சிரிக்கும்
இப்பொழுது அப்படித்தான் சிரிக்கின்றது
இப்படியெல்லாமா கதை கட்டுவார்கள்?
ஏம்பா காந்தி காலத்தில் எங்கே செப்பு காசு இருந்தது? அதற்கு எங்கே மதிப்பு இருந்தது?
எவனோ பைபிளின் கதையினை எடுத்து காந்தி வாழ்வில் நடந்தது என சொன்னால் அப்படியே போட்டுவிடுவீர்களா?
ஏம்பா காப்பி அடிச்சவனே, அப்பட்டமாக பைபிள் செப்புகாசு என்றா எழுதுவாய்? கொஞ்சம் 1 அணா, 2 அணா என்றாவது எழுத கூடாதா?
காப்பியடிக்க கூட தெரியாதா?