நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன்
நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன்
முன்பு ராமசந்திரன் “நான் ஏன் பிறந்தேன்?” என்றொரு தொடர் எழுதினார், “ம்ம் அத உங்கப்பன்கிட்ட போய் கேளு..” என திமுகவினர் கலாய்த்துகொண்டிருந்தனர்
சிலர் “தமிழ்நாட்டை நாசமாக்க..” என உரக்க சொல்லிகொண்டிருந்தனர்.
இப்பொழுது அதெல்லாம் நினைவுக்கு வர கூடாது, கமலஹாசன் கலைதொண்டு செய்ய பிறந்தவர் என்றுதான் நம்பிகொண்டிருந்தோம்
கலைச்சேவைக்காக அவரின் தனிபட்ட வாழ்வில் கூட தியாகம் செய்தார் என நினைத்திருந்தோம்
ஆனால் அதெல்லாம் இல்லையாம், அவர் பிறந்த காரணம் வேறாம்
ஆக நான் அரசியலை குறிவைத்தே கனவோடு நடித்துகொண்டிருந்தேன் என சொல்லாமல் சொல்கின்றார் கமலஹாசன்