எது கருப்பு தினம் …
இத்தேசம் பிரிந்து ரத்த ஆறு ஓடிற்று, 5 கோடிமக்கள் பாதிக்கபட்டனர், அது கருப்பு தினம் இல்லையாம்
காந்தி கொல்லபட்டு பெரும் சோகம் அப்பிற்று அது கருப்பு தினம் இல்லையாம்
சீனாவோடு மிக அவமானமாக தோற்றோம் அது கருப்பு தினம் இல்லையாம்
பொற்கோவில் படுகொலைகளும், இந்திரா கொலையும் , டெல்லி கலவரமும் கருப்பு தினம் இல்லையாம்
ஒரு சிறியநாட்டு தீவிரவாதகுழு 1500 இந்திய வீரர்களை கொன்று, இத்தேசத்து தலைவனை இந்தியரோடு கொன்றுபோட்டது கருப்பு தினம் இல்லையாம்
பாபர் மசூதி இடிக்கபட்ட அவமானம் கருப்புதினம் இல்லையாம்
மும்பை குண்டுவெடிப்பு, கோவை குண்டுவெடிப்பு, அதனை தொடர்ந்த குஜராத் ரயில் எரிப்பு போன்ற ரணங்கள் கருப்பு தினம் இல்லையாம்
எத்தனை அழிவுகள், எத்தனைஉயிரிழப்புகள், எத்தனை ஆயிரம் குடும்பம் அழிந்தது?
அவை எல்லாம் கருப்பு தினம் அல்லவாம், ஆனால் சிலரின் சில கோடிகள் அழிந்து போன நாள் கருப்பு தினமாம்
காந்தி கொல்லபட்டது, பாபர் மசூதி இடிப்பு, இந்திரா ராஜிவ் படுகொலைகள், மும்பை குண்டுவெடிப்பு தினம் போன்றவற்றை கருப்பு நாள் என சொல்லலாம், அர்த்தம் இருக்கின்றது
அவ்வளவு ரத்த சரித்திரங்களை இத்தேசம் கடந்து வந்திருக்கின்றது.
அப்படி இருக்கையில் ஏதாவது செய்து இத்தேசத்தின் கள்ளபணத்தினை , பதுக்கல் பணத்தினை ஒழிக்க ஒரு அரசு எடுத்த நடவடிக்கை ஒருநாளும் கருப்புநாள் ஆகாது.
அந்நடவடிக்கை வெற்றியா தோல்வியா என்பது வேறு விஷயம், ஆனால் அப்படி ஒரு நடவடிக்கை எடுக்க துணிந்ததே வாழ்த்துகுரிய விஷயம்
இதனை கருப்பு நாள் என சொல்பவன் எல்லாம் இத்தேசத்தின் “கருப்பு ஆடுகள்” என உறுதியாக சொல்ல முடியும்
எம்மை பொறுத்தவரைக்கும் தலைவி குஷ்புவிற்கு
அறுவை சிகிச்சை நடந்த அந்த தினமே “கறுப்பு தினம்”.