பணம் செல்லாது என சொல்லிவிட்ட ஒரு நாள் கருப்பு நாளாம்..

கலைஞரை மோடி சந்தித்தது அரசியல் நாகரீகம், இதனால் திமுக மீது சந்தேகம் கொள்வது தேவையற்றது : வீரமணி

இந்த சந்திப்பிற்கு வீரமணி ஏன் குதியாய் குதிக்கின்றார்?

என்ன குமாரு, பயமா இருக்கா?


ஒரே நாள் இரவில் அவசர சட்டம் என சொல்லி, பத்திரிகைகளை தடை செய்து, தலைவர்களை எல்லாம் சிறையில் தள்ளி, ஏனென்று கேட்டவர்கள் முதுகில் எல்லாம் மிதித்த எமர்ஜென்சி காலம் கருப்பு நாள் இல்லையாம்.

பத்திரிகை, நீதி, சட்டம் என எல்லா தூண்களையும் வளைத்த அந்த நள் கருப்பு நாள் இல்லையாம்

எத்தனை சாவுகள்? அந்த சாவுகளை கூட வெளிசொல்லாமல் தடை செய்த அந்த எமர்ஜென்சி காலம் கருப்பு நாள் இல்லவே இல்லையாம்.

சஞ்சய் காந்தியின் வெறியாட்டம், கட்டாய கருகலைப்பு நாட்கள் எல்லாம் என்ன? கருகலைப்பு என்பது கொலை ஆகாதா?

போபால் விஷவாயு ஆண்டர்சனை தப்பவிட்ட நாள் கருப்பு நாள் ஆகாதா?

ஆனால் பணம் செல்லாது என சொல்லிவிட்ட ஒரு நாள் கருப்பு நாளாம்..


நவம்பர் 8 என எல்லோரும் குதித்துகொண்டிருக்க தமிழிசை என்பவரை காணவில்லை

மற்ற நாட்களில் எல்லாம் புரூஸ்லி போல லெங் சாக் கட்டையினை சுத்தும் தமிழிசை இன்று மகா அமைதி

ஒருவேளை கடந்தவருடம் அவரும் பாதிக்கபட்டிருபாரோ?