உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார்
உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் இருக்கின்றார், HCL நிறுவண சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் வந்திருக்கின்றார்.
அரசியல் , சினிமா அல்லாமல் ஒரு பெண் அந்த உயரத்தை தொட்டிருப்பது பெரும் விஷயம்.
இதனையெல்லாம் தென்னக நாடார் இம்சைகள் சொல்லுமா என்றால் சொல்லாது
ஒரு தாழ்த்தபட்ட இனத்திலிருந்து வந்த வாரிசு, அதுவும் பெண் மிகபெரும் உயரத்தை தொட்டதை எல்லாம் சொல்லமாட்டார்கள்
மாறாக கராத்தே செல்வின், வெங்கடேசன், ராக்கெட் ராஜா போன்ற ரவுடிகளின் படத்தை தூக்கிகொண்டு “நாடார் லே” என சொல்லிகொண்டிருப்பார்கள்
அதனை விட கொடுமை, சரத்குமாரை கொண்டாடிகொண்டிருப்பது காரணம் அவரும் நாடாராம்
இந்த ராமராஜன், சார்லி, குமரிமுத்துவினை எல்லாம் ஏன் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை.
சிவநாடார் படித்திருக்கின்றார், பெரும் தொழிலை செய்தார் தன் மகளை தலை நிமிர வைத்திருக்கின்றார்.
(சிவநாடார் இந்தியும் படித்திருக்கின்றார் என்பது கூடுதல் தகவல்)
அப்படி இந்த இம்சைகளை பார்த்து “போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா” என சொன்னால் ஏதாவது தென்மாவட்ட பஸ் ஸ்டாண்டிற்கு வந்துவிட்டு போ பார்க்கலாம் என்பார்கள்