மிஸ்டர் ஸ்டாலின், இந்திரா காந்தி செத்துட்டாங்க..

Image may contain: 1 person, close-up

“எனக்கு நேற்று (November 8) பிறந்தநாள், தம்பிக எல்லாம் அதனை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாட காத்திருந்தாங்க‌

2015 வரைக்கும் அப்படி உற்சாகமா கொண்டாடினாங்க , தமிழகம் முழுக்க ஒரு உணர்ச்சி வந்தது, இது இந்திய அரசுக்கு பிடிக்கல‌

ஆனா இதனை மறைக்க விரும்பித்தான் போன வருஷமும் இந்திய அரசு கருப்பு பண ஒழிப்பு என சொல்லி தம்பிகள கேக் கூட வாங்கமுடியாம செஞ்சது

இந்த வருஷம் தமிழர் எழுச்சிநாள் கொண்டாடலாம்ணா திமுக காங்கிரஸ் என எல்லா கட்சியும் கருப்பு நாள்னு ஆர்பாட்டம் பண்ணுது

அது எப்படி சரியா என் பிள்ளைக அண்ணன் பிறந்தநாள தமிழர் எழுச்சிநாள்னு கொண்டாட தயாராகும்பொழுது இந்த பாஜக காங்கிரஸ் திமுக எல்லாம் குதிக்குது?

தமிழனுக்கான அரசு அமையவே கூடாதுங்கற கவனத்துல இருக்காங்க‌ ஒறவே

ஏன் அய்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் , அய்யா கலைஞர் பிறந்தநாள் மோடி பிறந்தநாள், அன்னைக்கு பணமதிப்பு நீக்கல, இதுதான் இதுல உள்ள அரசியல் தம்பி, தமிழனை அடிமையாகவே வைத்திருக்க நடக்கும் சதி

இதெல்லாம் தமிழன் தமிழர் எழுச்சிநாள் கொண்டாட கூடாதுண்ணு நடக்குற சதி , இதுதான் இங்க உள்ள பெரச்சினை, இத எல்லோரும் புரிஞ்சிக்கணும்

இந்த அநியாயத்தை கேட்க நாதி இல்லாம போயிட்டோம தம்பி, ஒரு தேசிய இனபிள்ளைகளுக்கு நேர்ந்த அவமானம்”


நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை, நள்ளிரவிலேயே இழந்துவிட்டோம்: மு.க.ஸ்டாலின்

மனிதர் இன்னும் மிசா காலத்தில் கைது செய்யபட்ட நள்ளிரவின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை போல..

மிஸ்டர் ஸ்டாலின், இந்திரா காந்தி செத்துட்டாங்க..


நான் கிறித்தவராக மதம் மாறவில்லை எங்கள் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கும் எனக்கும் இன்றும் தொடர்பு உள்ளது : வைகோ

என்னது? பிள்ளையார் கோவிலுக்கும் உங்களுக்கும் தொடர்பா?

அப்படியானால் நீர் ஒரு போலி பெரியாரிஸ்டா? பிள்ளையாரை வணங்கியதால்தான் பலமுறை ஓடிசென்று பாஜகவிற்கு வால் பிடித்தீரா?

நேரடியாக ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தால் என்ன? எதற்கு அப்வப்பொழுது இது பெரியார் பூமி என சத்தம்?

இதில் கழுத்தில் கருப்பு துண்டு வேறு..