விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது
இந்த விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது
ரஷ்ய புரட்சி நூற்றாண்டினையொட்டி தமிழகத்தில் இருக்கும் மார்க்ஸியவாதியான தியாகு என்பவரை பேட்டி கண்டிருக்கின்றார்கள்
தியாகு எப்படிபட்டவர் என்பதும், அவர் மரண தண்டனை வரை சென்றுவந்தவர் என்பதும் எல்லோரும் அறிந்தது
கவிஞர் தாமரைக்கும் அவருக்குமான சர்ச்சைகள் உலகறிந்தது, இன்னும் அவர் கவிஞருக்கு உருப்படியான தீர்வு கொடுக்கவில்லை
மார்க்சிஸம் பற்றி தியாகு பெரிதாக அறிந்திருக்கலாம், மார்க்ஸின் ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் புரிந்திரிக்கலாம், லெனினின் ஒவ்வொரு காலடிக்குன் அன்னாரிடம் விளக்கம் இருக்கலாம்
ஆனால் அப்படி வாழ்ந்தாரா? அண்டை நாட்டில் நடந்த போரில் ஏதும் மார்க்ஸிசம் பேசினாரா என்றால் சுத்தமாக இல்லை
ஒரே ஒரு கேள்வியினை அன்னார் எதிர்கொள்ள முடியாது
இவர் உண்மையிலே பொதுவுடமைவாதி என்றால், உண்மையிலே மார்க்ஸிஸவாதி என்றால் ஈழபிரச்சினையில் சேகுவேரா பாணியில் இருந்த பத்மநாபாவினை அல்லவா ஆதரித்திருக்க வேண்டும்
அந்த மனிதனே ஈழத்தில் வர்க்கபேதம் ஒழிந்து சோஷலிஸ்ட் தமிழீழம் உருவாக வேண்டும் என பாடுபட்டான்
ஆனால் தியாகு அவனை விட்டுவிட்டு பாசிஸ்ட் பிரபாகரன் பின்னால் சென்றதும் அவனை ஆதரித்ததும், இன்றுவரை அப்படி பெசிகொண்டிருப்பதும் என்ன வகை?
ஹிட்லர் எனும் பாசிஸ்டை ஒழித்து கட்டியது சமதர்ம சோவியத் யூனியன்
அந்த சோவியத்தின் புகழை சொல்ல, ஹிட்லரை போல பாசிஸ்டான பிரபாரகனின் பின்னால் சென்ற தியாகு எப்படி சரிவருவார்?
அந்த தியாகு தன் கொள்கையினையே மாற்றி பிரபாகரன் பக்கம் சாய்ந்த தில்லாலங்கடி
அவரை ஒரு மார்க்ஸியவாதியாக இந்த விகடன் பேட்டி எடுக்கின்றதாம்
இது பார்ப்பவர் கண்களில் எளிதாக தோன்றும் கேள்வி
ஆக தமிழகத்தில் யாருக்குமே அறிவில்லை, யாருக்குமே மார்க்ஸிஸம் தெரியாது அதனால் யாரையும் வைத்து பேட்டி எடுக்கலாம் என விகடன் நினைத்திருபது தெரிகின்றது
அப்படி இல்லாவிட்டால் பாசிஸ்ட் பிரபாரகன் பின்னால் சென்ற தியாகுவினை மார்க்ஸிஸ புரட்சிபற்றி பேச அழைத்திருப்பார்களா?